மீண்டும் ஒரு இனிய மாலைப்பொழுதில் என் கனவில் பூத்த என் காதலுடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.
செல்லக் குறும்புகளால்
என் காதோரம்
சில்வண்டாய் ரீங்காரம் பாடிட
சொல்லம்புகளால்
என் செல்களை துளைத்திட
துக்கம் கொண்டு
நெஞ்சினில் சாய்கையில்
தென்றலாய் என் தலை கோதிட
செல்லக் குறும்புகளால்
என் காதோரம்
சில்வண்டாய் ரீங்காரம் பாடிட
சொல்லம்புகளால்
என் செல்களை துளைத்திட
துக்கம் கொண்டு
நெஞ்சினில் சாய்கையில்
தென்றலாய் என் தலை கோதிட
கடற்கரை மணலில்
அவன் தோளுரசி
காலார நடை பயின்றிட
காலார நடை பயின்றிட
முழு நிலாப்பொழுதில்
நிலாச் சோற்றை என் கையால்
அவனுக்கு ஊட்டிட
ஓர் திருவிழா மாலையில்
நிலாச் சோற்றை என் கையால்
அவனுக்கு ஊட்டிட
ஓர் திருவிழா மாலையில்
நல்லூர் மணலில்
என்னோடமர்ந்து சுண்டல்
சுவைத்து மகிழ்ந்திட
சுவைத்து மகிழ்ந்திட
என் ஊர்த் தெருவில்
பார்ப்போர் கண்விரிய
அவன் கை கோர்த்து
நகர்வலம் சென்றிட
பார்ப்போர் கண்விரிய
அவன் கை கோர்த்து
நகர்வலம் சென்றிட
என் கண்களினால் காதல் பேசி
கவிதைகளால்
அவன் உள்ளமதை உரசிட
என்னை மட்டும் நேசித்து
எனக்காக மட்டும் சுவாசித்திட
கவிதைகளால்
அவன் உள்ளமதை உரசிட
என்னை மட்டும் நேசித்து
எனக்காக மட்டும் சுவாசித்திட
என் காதலை அவன் மறந்து
அவன் நினைவினில் மட்டும் வாழ்ந்திட
இவையெல்லாம் நிகழ்ந்திட
அவன் நினைவினில் மட்டும் வாழ்ந்திட
இவையெல்லாம் நிகழ்ந்திட
கனவில் மட்டும்
எனக்கும் ஓர் காதல் வேண்டும்...
எனக்கும் ஓர் காதல் வேண்டும்...

































