என் ப்ரிய உறவே...................
எங்கிருந்து வந்தாய்
என் மனம் ஓடிக்கவென
என் மனம் ஓடிக்கவென
நம்மை நாமே அறிந்து கொள்ளாத
அந்த கணங்களில்
அந்த கணங்களில்
சகோதரி(ரன்) போல என்றாய்
நிஜமாகவே ஆனதனை நீ அறியாயடி(டா)
ஈர் பத்து நாள் கூட கதைத்திராமலே
இதயத்தில் நீ இடம் பிடித்ததுவும்.....
உள்ள கதை அனைத்தையும்
உன்னிடம் உளறிக் கொட்டிட
உயிர் துடித்ததுவும் நீ உணராயடி(டா)............
நிமிஷ முட்களில் இதயம் கிழிந்ததில்
வடிந்த குருதி துடைக்காமல்
உன் முகம் காணவென நித்தமும்
நான் வரத் துடித்ததுவும்- நீயோ
நீண்டதொரு காலத்திற்கு
நீங்கிட நினைத்ததுவும்
நீங்கிட நினைத்ததுவும்
நியாயம்தானா சொல்லடி(டா)...........
"போகவேண்டாம்"
அலறித் துடித்த என் மனதின் ஓலம்-உன்
செவிகளில் ஏறவே இல்லை
என் விழி சிந்திய கண்ணீர் கடலால்-உன்
மனதும் கரையவே இல்லை
நீ சென்றுதான் ஆகவேண்டுமானால்
சென்று வா............
சென்று வா............
என்றோ.............
ஒருநாள் -நீ
திரும்பி வர முன்
பாசம் வைத்த பாவி உயிர் போயிடினும்
உன் வரவை எதிர் பார்த்து
கல்லறையின் இருட்டிலும்
கண்ணிமை திறந்திருப்பேன்
உன் முத்துப் பற்கள் சிந்தும்
அந்த உன் இனிய புன்னகைக்காக................
15 comments:
//உள்ள கதை அனைத்தையும்
உன்னிடம் உளறிக் கொட்டிட
உயிர் துடித்ததுவும் நீ உணராயடி(டா)............//
அடடடா அருமை அருமை.....
//உன் வரவை எதிர் பார்த்து
கல்லறையின் இருட்டிலும்
கண்ணிமை திறந்திருப்பேன்//
அசத்தல் கவிதை மக்கா....
//உன் வரவை எதிர் பார்த்து
கல்லறையின் இருட்டிலும்
கண்ணிமை திறந்திருப்பேன்
உன் முத்துப் பற்கள் சிந்தும்
அந்த உன் இனிய புன்னகைக்காக.//
ரசித்த வரிகள்
வாழ்த்துக்கள்
மிக ரசித்தேன் ...
அனைத்தும் அருமை ...
அருமையாக எழுதி இருக்கீங்க....
உணர்வின் வலிகள் தாங்கள் வார்த்தெடுத்த வரிகள் ...
அருமை
உடல்களுக்குத் தான் பிரிவுகளே தவிர.. உணர்வுகள் பிரிந்ததாய் நான் அறிந்ததில்லை...
ஃஃஃஃஃகல்லறையின் இருட்டிலும்
கண்ணிமை திறந்திருப்பேன் ஃஃஃஃஃ
அது சரி நீங்க கிறிஸ்தவரா ? ஹ...ஹ...ஹ...
கவிதை நல்லாருக்கு. பிளாக்கின் லே அவுட் அசத்தல்
அலறித் துடித்த என் மனதின் ஓலம்-உன்
செவிகளில் ஏறவே இல்லை
என் விழி சிந்திய கண்ணீர் கடலால்-உன்
மனதும் கரையவே இல்லை
நீ சென்றுதான் ஆகவேண்டுமானால்
சென்று வா............
என்றோ.............
ஒருநாள் -நீ
திரும்பி வர
அருமை அருமை
உணர்வின் வலிகளை சுமக்கும் கவிதை.. அருமை.
வலையுலகுக்கு புதியவரா? வருக வருக! உங்கள் வரவு நல்வரவாகட்டும்!
அட நமக்கு ஓட்டுப் போடுறதுக்கு புதுசா ஒருத்தர் வந்திருக்காரே! ஓட்டுப் போடுவீங்களா சிஸ்டர்?
அருமை
@ஓட்ட வட நாராயணன்
அதுக்கென்ன போட்டாப் போச்சு.ஆமா நீங்க என்ன அரசியல்வாதியா?ஓட்டு கேட்டு போட வைக்கிறீங்க...............?
@MANO நாஞ்சில் மனோ
நன்றி நன்றி..........
@S மகாராஜன்
நன்றி நன்றி..........
@ அரசன்
நன்றி நன்றி..........
@சித்ரா
நன்றி நன்றி..........
@தினேஷ்குமார்
நன்றி நன்றி..........
@ம.தி.சுதா
வேண்டாம் அப்புறம் நான் சொல்லிடுவேன்...............
@சி.பி.செந்தில்குமார்
நன்றி நன்றி..........
@ரேவா
நன்றி நன்றி..........
@தோழி பிரஷா
நன்றி நன்றி..........
@விக்கி உலகம்
நன்றி நன்றி..........
Post a Comment