This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday 25 June 2011

தொடரும் காத்திருப்புகள்.

                             
அருகே இருக்கையில்  வெ(ம)றுத்த
அகன்று செல்கையில் விரும்பியது ஏன்
கிட்ட இருக்க அன்பாய் தெரிந்தது
கடந்து செல்ல காதலாகியது ஏன்
பக்கம் இருக்கத் துடித்த என் இதயம் 
நீ பிரிந்து சென்றதும் தூங்கியது ஏன்

கடந்துபோன பிரிவும் கூட
என் சிந்தனைகளை மீட்டிச்செல்கிறது 
உன் சிரித்த முகம்கூட
நினைவில் வந்து போகிறது
கதை சொல்லிப்போன நினைவு
என்னைத் துடிக்க வைக்கிறது

கண்ணிமைக்காதிருந்த வினாடிகள்
உனக்காக என்னை அழ வைக்கின்றன      
மனம் தடுமாறி பின் 
சிந்திக்க வைக்கின்றன

விரும்பிய உன்னை விலக்கிய நெஞ்சம்
விரதம் இருந்து தவிப்பதும் ஏன்
நிஜத்தில் இல்லாதுபோன உணர்வு
நினைப்பிலே என்னைக் கொல்வதும் ஏன்

அன்று உன் காதலை நீ சொன்னபோது
ஏனோ ஏற்கவில்லை 
இன்று இல்லாத உனக்காக
ஏங்குகிறது என் இதயம்

உன் நினைவுகளை சுமந்தபடி 
வாழ்வதைத்தவிர
எதுவுமே முடிவதில்லை இப்போதெல்லாம்
உன் காதலுக்காக

காதலுடன் நீ 
என் அருகில் வரும்போதெல்லாம்
விரட்டியது மனசு 
எப்போ செல்வாய் என நினைத்த நான்
என்று வருவாயென இன்று
ஏங்குவதும் ஏன் 

வருவாயா மீண்டும் எனக்காக
ஒருமுறையாவது
காத்திருக்கிறேன் உனக்காக.



 

Wednesday 1 June 2011

ராக்கெட் விடுறவங்களுக்கு கொடுக்கிற நோஸ்கட் என்பது இதுதானோ ?

             
               காதலை உலகம் எப்பிடியெல்லாம் கொண்டாடுகிறது.பலர் தம் காதலை வெளிப்படுத்த தெரியாமல் பெரும் அவஸ்தைப்படுகிறார்கள்.சிலர் காதலை வெளிப்படுத்தி காதலில் வென்றும் இருக்கிறார்கள்.சிலர் தோற்றும் இருக்கிறார்கள்.இங்கும் ஒருத்தன் எவ்வாறு தன் காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்றுதான் பாருங்கள்.இது ஒரு லெட்டர் வடிவிலான காதல் காமடி.கொஞ்சம் படிச்சுத்தான் பாருங்களேன்.

ஒரு மாணவன் லவ் லெட்டர் எழுதுகிறான்......

அன்பே சுசி ! 
கீழே நான் கொடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கும் உனக்கு சரியென்று தோன்றும் பதிலை தெரிவு செய்.

1. நீ நம்ம கிளாசுக்கு உள்ளே வரும் போதெல்லாம் நிச்சயம் உன் பார்வை என்மேல விழுகிறது.அதுக்கு  காரணம் :
. காதல்
. என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியல
. உண்மையாவா?அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே


2. நீ ஒருநாள் கிளாஸ்ல பாடிக் கொண்டிருந்தப்போ அந்த நேரம் பார்த்து நான் உள்ளே வந்தேன்.நீ உடனே பாடுறதை நிறுத்திவிட்டாய் .அதுக்கு காரணம்:
. உன் முன்னால் பாடுறதுக்கு எனக்கு வெட்கமா இருந்திச்சு
. நான் பாடிக் கொண்டிருந்தது உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு எனக்கு பயமா இருந்திச்சு
. நீ திடீரென்று உள்ளே வந்தது எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு


3. உன்னோட சின்ன வயசு போட்டோவை நீ எல்லோருக்கும் காட்டிக் கொண்டிருந்தாய்.ஆனால் நான் கேட்டதும் நீ அதை மறைச்சிட்டாய்.அதுக்கு காரணம்:
. எனக்கு வெட்கமா இருந்திச்சு
. உன்கிட்ட காட்டுறதுக்கு எனக்கு ஏதோ ஒரு சங்கடம்.
. என்னவோ தெரியல.


4. நாங்க சுற்றுலா போனப்போ, ஒரு மேடு ஏறும்போது நானும் என்கூட இருந்த நண்பனும் உனக்கு கை கொடுக்க வந்தோம்.நீ அவனோட கையை பிடிச்சு மேல ஏறி வந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உன்னோட ஏமாற்றத்தை பார்க்க ஆசைப்பட்டேன்.
உன் கையை பிடிச்சா, உடனே விட்டுட்டு போக எனக்கு மனசு வராது
இ. முதன் முதலில் உன் கையை அப்பிடியா பிடிக்கிறது

5. நீ நேற்று பஸ் ஸ்டாண்டில காத்துக் கொண்டிருந்தாய்.ஆனா பஸ்ல ஏறல.அதுக்கு காரணம்:
அ. நீ ஏறும்போது ஏறலாம்னுதான்
ஆ. நீ என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை குழப்ப வேணாம் என்று நினைச்சேன்.              
இ. உன்னை நினைச்சிட்டு இருந்ததில பஸ் வந்தததை கவனிக்கல 

6. எனக்கு ரோஜாப்பூ  பிடிக்கும்னு ஒருநாள் சொன்னேன்.அடுத்தநாள் நீ தலையில ரோஜாப்பூ வச்சிட்டு வந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உனக்குத்தான் ரோஜாப்பூ பிடிக்குமே அதுக்காக
ஆ. உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கு பிடிக்க வேணாமா
இ. நீ காரணம் கேட்டால் உனக்கு மட்டும்தான் ரோஜா பிடிக்குமான்னு சண்டை பிடிக்கலாம்னு நினைச்சேன்

7. என் பிறந்தநாள் அன்று காலையில் நான் கோயிலுக்கு வந்தேன்.நீயும் அன்று கோயிலுக்கு காலையில் கோயிலுக்கு வந்திருந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உன் பிறந்த நாளன்று உன் கூட சாமி கும்பிடலாம்னு
ஆ. உன் பிறந்தநாளன்று எல்லோருக்கும் முதல் நான் உன்னைப்
பார்க்கணும்னு
இ. உனக்கு கோயிலில் வச்சு வாழ்த்து சொல்லணும்னு
ஆசைப்பட்டேன்.

இந்தக் கேள்விகளுக்கு நீ எந்தப் பதிலை தெரிவு செய்திருந்தாலும் தப்பில்லை.எல்லா கேள்விகளுக்கும் ஒரு புள்ளி இருக்குது.
அ- இற்கு 10 புள்ளி.
ஆ- இற்கு 5 புள்ளி.
இ- இற்கு 3 புள்ளி.
இந்த கேள்விகளுக்கு நீ வாங்கியிருக்கிற மொத்தப் புள்ளிகள்....


-50 புள்ளிகளுக்கு மேல இருந்தால், "நீ என்னை காதலிக்கிறாய் ஏன் அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாய்."
-30 இற்கும் 40 இற்குமிடையில் இருந்தால், "உனக்கு என்மேல காதல் வர ஆரம்பிச்சிருக்கு"
-30 இற்கும் கீழே இருந்தால்,"உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு.ஆனால், காதலிக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறாய்."
உன்னோட பரீட்சை முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
                                                                                                                  -உன் அன்புக் காதலன்.

இந்த லெட்டரை பார்த்திட்டு எரிச்சலான அந்தப் பொண்ணு , முள்ளை முள்ளால்தான் எடுக்கணும் என்று அவன் கொடுத்த மாதிரியே ஒரு பதில் லெட்டர் எழுதிக் கொடுத்தாள். 




இது அவளோட லெட்டர்,

1. வகுப்பிலே முதல் வரிசையில யாராவது உட்கார்ந்திருந்தா உள்ளே வாறவங்க அவங்களை பார்க்கிறது சகஜம்.
1. ஆம்.                                                              2. இல்லை.

2. பாட்டுப் பாடும்போது, திடீரென்று பாட்டு வரி மறந்து போனால் பாடுறவங்க பாடுறதை பாதியிலே நிறுத்துவாங்கதானே.
1. ஆம்.                                                              2. இல்லை.

3. நான் என்னோட சின்ன வயசுப் போட்டோவை என் நண்பிகள் கிட்ட காட்டிக் கொண்டிருந்தப்போ நீ நடுவில வந்து மூக்கை நுழைச்சிட்டாய்.
1. ஆம்.                                                              2. இல்லை.

4. சுற்றுலாவில உன் கையைப் பிடிச்சு மேடு ஏறுவதை நான் தவிர்த்தேன்.அது ஏனென்று உனக்கு இன்னும் புரியவில்லை.
1. ஆம்.                                                              2. இல்லை.

5. நான் என்னோட தோழிக்காக பஸ் ஸ்டாண்டில காத்துக் கொண்டிருக்கக் கூடாதா?
1. ஆம்.                                                              2. இல்லை.

6. உனக்கு ரோஜா மட்டுமல்ல தாமரை,காலீப்ளவர் கூட பிடிக்கும்னு சொன்னாயே.அது உண்மைதானே?
1. ஆம்.                                                              2. இல்லை.

7. ஓ அன்று உன் பிறந்தநாளா? அதுதான் கோயில் பக்கம் பார்த்தேனா? நான் தினமும் காலையில் கோயிலுக்கு வருவேன்.அது உனக்கு தெரியுமா?
1. ஆம்.                                                              2. இல்லை.

மேலே சொன்ன கேள்விகளில்,


-ஒரு கேள்விக்காவது நீ "ஆம்" என்று சொல்லியிருந்தால் நான் உன்னைக் காதலிக்கவில்லை.
-ஒரு கேள்விக்காவது நீ "இல்லை" என்று சொல்லியிருந்தால் உனக்கு காதலென்றால் என்னென்றே தெரியல.                                                                         
                                                                                                                                         -சுசி.

இது எப்புடீ.............?
         






  

 
   

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More