Saturday 25 June 2011

தொடரும் காத்திருப்புகள்.

                             
அருகே இருக்கையில்  வெ(ம)றுத்த
அகன்று செல்கையில் விரும்பியது ஏன்
கிட்ட இருக்க அன்பாய் தெரிந்தது
கடந்து செல்ல காதலாகியது ஏன்
பக்கம் இருக்கத் துடித்த என் இதயம் 
நீ பிரிந்து சென்றதும் தூங்கியது ஏன்

கடந்துபோன பிரிவும் கூட
என் சிந்தனைகளை மீட்டிச்செல்கிறது 
உன் சிரித்த முகம்கூட
நினைவில் வந்து போகிறது
கதை சொல்லிப்போன நினைவு
என்னைத் துடிக்க வைக்கிறது

கண்ணிமைக்காதிருந்த வினாடிகள்
உனக்காக என்னை அழ வைக்கின்றன      
மனம் தடுமாறி பின் 
சிந்திக்க வைக்கின்றன

விரும்பிய உன்னை விலக்கிய நெஞ்சம்
விரதம் இருந்து தவிப்பதும் ஏன்
நிஜத்தில் இல்லாதுபோன உணர்வு
நினைப்பிலே என்னைக் கொல்வதும் ஏன்

அன்று உன் காதலை நீ சொன்னபோது
ஏனோ ஏற்கவில்லை 
இன்று இல்லாத உனக்காக
ஏங்குகிறது என் இதயம்

உன் நினைவுகளை சுமந்தபடி 
வாழ்வதைத்தவிர
எதுவுமே முடிவதில்லை இப்போதெல்லாம்
உன் காதலுக்காக

காதலுடன் நீ 
என் அருகில் வரும்போதெல்லாம்
விரட்டியது மனசு 
எப்போ செல்வாய் என நினைத்த நான்
என்று வருவாயென இன்று
ஏங்குவதும் ஏன் 

வருவாயா மீண்டும் எனக்காக
ஒருமுறையாவது
காத்திருக்கிறேன் உனக்காக.



 

5 comments:

உன் நினைவுகளை சுமந்தபடி
வாழ்வதைத்தவிர
எதுவுமே முடிவதில்லை இப்போதெல்லாம்
உன் காதலுக்காக //// ஆஹா என்ன அற்புதமான வரிகள்... கலக்கல் சகோ..

காத்திருப்பிலும் ஒரு சுகம் இருக்கின்றது.

பொறுங்க சொல்லி விடுகிறேன்...

வருவாயா மீண்டும் எனக்காக
ஒருமுறையாவது
காத்திருக்கிறேன் உனக்காக. ---

காத்திருக்கிறேன் காலங்கள் கடந்தாலும்...
நன்றி நட்பே சில இதயங்கள் ஏற்று கொள்ள முடியாத நம் காதலை நம் பிரிவில் நிச்சயமா உணர்வார்கள்

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More