This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday 16 January 2014

உறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)

அண்ணன் தங்கை உறவை எடுத்துச் சொல்லும், எத்தனை தடவை பார்த்தாலும் அதே உணர்வை தூண்டிடும் ஓர் பாசக் காவியம். நீண்ட நாட்களின் பின் விழி இமைக்க மறந்து ரசித்துப் பார்த்த திரைப்படம் என்றே கூற வேண்டும்.

கிழிந்து போன தங்கையின் காலணியை எடுத்துச் சென்று தைத்து வரும் வழியில் எதிர்பாராமல் அதை தொலைத்து விட்டு விழிகளில் நீர் வழிய வீடு திரும்பும் அண்ணன். தந்தையிடம் அண்ணனை காட்டிக் கொடுக்க முடியாமலும், காலணியில்லாது பாடசாலை செல்ல முடியாமலும் தவிக்கும் தங்கையின் நிலை இருவரது பாசப்பிணைப்பை எடுத்துக் காட்டுகிறது.

வேறு வழியின்றி அண்ணனின் காலணியை இருவரும் பாவிப்பதென முடிவெடுத்து ஒருவர் மாறி ஒருவர் அணிந்து செல்வதும், தங்கை வரும்வரை அண்ணன் காத்திருப்பதும், அண்ணனுக்கு தாமதமாகிவிடும் என்று வேக வேகமாக தங்கை ஓடி வருவதும் உருக வைக்கிறது.

தொலைந்துபோன தன் காலணியை தன் பாடசாலை மாணவியே அணிந்துவருவதை அவதானித்து அவளுக்கு தெரியாமல் அவளைத் தொடர்ந்து சென்று அவள்  வீட்டை தெரிந்து கொண்டு மறுநாளே தன் தமயனை அழைத்துச் சென்று காட்டியபோதும் அச் சிறுமியின் குடும்ப நிலவரம் அறிந்து அவர்கள் ஏதும் பேசாது வீடு திரும்புகையில் அவர்களது இரக்க குணத்தை எடுத்துக் காட்டுகிறது.

பாடசாலையில் ஓட்டப் பந்தயம் வைப்பதாயும் அதில் மூன்றாமிடம் பெறுபவர்க்கு காலணி பரிசு என்ற அறிவித்தல் அறிந்ததும் போட்டிக்கான பதிவு முடிவுற்ற பின்னரும் ஆசிரியரிடம் கெஞ்சி மன்றாடி சம்மதம் வாங்குவதும் அந்த சந்தோச செய்தியை தங்கையிடம் கூறி மகிழ்கையில் அவனதும் மன உறுதியையும், அவளது நம்பிக்கை தன்மையையும் காட்டுகிறது.



தங்கைக்காக பாசத்தில் உருகும் அண்ணன் , அண்ணனின் சூழ்நிலையை உணர்ந்து நடந்து கொள்ளும் தங்கையின் மனப்பாங்கு மெய்சிலிர்க்க வைக்கிறது.
ஆனால் இவ்வளவு உணர்வுகளையும் காட்டிய இயக்குனர் கடைசியில் யாரையும் அழ வைக்கவில்லை என்பது தான் சிறப்பு.
 இப்படி ஒரு நல்ல படத்தை அண்ணாவின் மடிக்கணணியில் இருந்து திருடிப் பார்த்ததுமில்லாமல் எதிர் பதிவு போடுவதிலும் எனக்கு துளியளவும் திருட்டு உணர்ச்சியே இல்லை. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேணுமல்லவா. என் அண்ணன்களுக்கு அப்படி ஒரு தங்கச்சியாக இருக்கவே எப்போதும் ஆசைப்படுகிறேன்.
Photobucket

Thursday 7 February 2013

காதல்னா இதுதாங்க!

இது காதலர் மாதம்னு சொல்றாங்களே.அதனால இந்த மாசம் முழுதும் காதல் பதிவுகள் எழுதலாம்னு நினைக்கிறேன்.என்ன சொல்றீங்க உறவுகளே..?

அண்ணலும் நோக்கினான் 
அவளும் நோக்கினாள் 
கண்ணும் கண்ணும் கலந்தன
காதல் பிறந்தது

 இது அந்தக்காலம்,,,

அண்ணலும் நோக்கியா
அவளும் நோக்கியா
அலைபேசிகள் கலந்தன
காதல் வளர்ந்தது

இது இந்தக்காலம்,,, 

நான் நினைக்கிறேன் இதுதான் காதலா இருக்குமோ..?
*** சின்னஞ்சிறுசுகளின் அன்பு மலர்ச்சி அதன் சந்திப்பில் உண்டாவது தான் காதல்.

*** மனிதாபிமானம் கூடிய, விட்டுக்கொடுத்து இன்பம் காண்கின்ற, மன்னித்து மகிழ்கின்ற, செக்ஸ் அடிப்படையில் தோன்றுகின்ற ஆண், பெண் உறவு தான் இந்தக் காதல்.

*** காதலன் / காதலியின் ஸ்பரிசத்தினால் எவ்வளவு இன்பம் உண்டாகின்றதோ அவ்வளவு இன்பம் அவன் / அவளைப் பற்றி நினைப்பதிலும் உண்டாகின்றது.

*** காதல் சாவில்லாதது.அதற்கு அழகு தெரியாது.

*** ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்னியோன்யமான காதலர்களாக இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொண்டபின் இல்லற நெறியின் நுணுக்கங்களை அறிந்து நடந்து கொள்ளவில்லையாயின் அவர்களின் காதலின் இனிமையே நாளுக்கு நாள் மறைந்து கொண்டே போகும்.

*** அன்றாடம் எத்தனையோ ஆண்கள் பெண்களைக் காண நேரிடுகிறது.ஆனால் அவர்களில் ஒரு சிலருக்குத்தான் மற்றவர்களைக் கண்டதும் மனதில் கவர்ச்சி உண்டாகிறது.அந்தக் கவர்ச்சியும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் அமையும் போது காதல் பிறக்கிறது.

*** காதலிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காக ஏங்குபவர்களுக்கெல்லாம் அது கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது. ஆனால் அது பற்றியே எண்ணாமலிருப்பவர்களை அது வலியத் தேடி வராதென்று சொல்லவும் முடியாது

*** வார்த்தையின் உதவியில்லாது ஜாடை, கை நெளிவு, உடல் வளைவு, கன்னக்குழிவு, கண்பார்வை இவற்றின் மூலமாக சுலபமாக தன் உள்ளத்து காதல் உணர்வுகளை வெளியிட்டு விடுவார்களாம் பெண்கள்.

காதலின் தூய்மையை காவியங்களில் மட்டும்தான் காண முடியும்னு பெரியவங்க சொல்றாங்க.எனக்கு ஏதும் தெரியலங்க.நான் குட்டிப் பொண்ணுங்க.

x_3d7f9d59 photo x_3d7f9d59_zps619c619b.gif

Saturday 5 January 2013

வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.

உறவுகளுக்கு புதுவருட நல்வாழ்த்துக்களுடன் நீண்டநாட்களின் நினைவுகளுடன் நான் உங்கள் சித்தாரா.

வீட்டிலிருந்தவாறே வருமானம் ஈட்டிக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் கற்பூர தயாரிப்பு.இது ஒரு பொழுதுபோக்காக இருப்பது மட்டுமன்றி வருமான மூலமாகவும் இருக்கிறது.இன்றைய அவசர உலகத்தில் நாம் இவற்றையெல்லாம் சிந்திப்பதேயில்லை.
கற்பூரம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி நானறிந்த தகவலை விளக்கப் படங்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.

செய்முறை.
முதலில் விளைவு கற்பூர கட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.


அந்த விளைவு கற்பூர கட்டிகளை இவ்வாறு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்பு அரைத்த கற்பூரத்தை சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து  கொள்ளவும்.
இப்போது கலவை தயார்.


சிறிய கரண்டியினால் தேவையான அளவு கற்பூரத்தை அச்சிற்குள் போட வேண்டும்.

அச்சினுள் கலவையை போட்டபின் இவ்வாறு சுத்தியலால் நன்கு அடித்துக் கொள்ளவும்.(உங்கள் பலம் முழுவதையும் காட்ட வேண்டுமென்று அவசியமில்லை.)


                                                    பின்பு அச்சினை தட்டி கற்பூர கட்டியினை வெளியில் எடுத்து கொள்ள வேண்டும்.






பெற்றுக் கொண்ட கற்பூர கட்டிகளை அதற்கென தயாரிக்கப்பட்ட காகிதத்தில் வைத்து இவ்வாறு சுற்றிக் கொள்ள வேண்டும்.

இதோ கற்பூரம் ரெடி.
எவ்வளவு இலகுவான ஓர் வழிமுறை.நீங்க கூட முயற்சி பண்ணிப் பார்க்கலாம்.




கற்பூரம் பற்றிய தகவல்களை  இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
கற்பூரம்
Photobucket

Sunday 9 September 2012

கலைந்த கனவுகள்.

தனிமையின் பிடிகளை தூர வீசி  என் நேசித்த நினைவுகளுடன் நீண்ட நாட்களின் பின் உறவுகளை நாடி அநேக நமஸ்காரங்களுடன் வாழ்வியலின் தத்துவத்தை எனக்கு உணர வைத்த பிறிதொரு பதிவில் சந்திக்கிறேன்.

தெள்ளிய நீர் நிறைந்த அழகிய தாமரைத் தடாகம்.அதில் ஓராயிரம் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின.அம்மலர்களின் தேனமுதை பருகுவதற்காக பல வண்டுகள் ரீங்காரமிட்டபடி பறந்து திரிந்தன.அதில் ஒரு கருவண்டு மிதமிஞ்சிய தேனை அருந்திவிட்டு தாமரையில் மதிமயங்கி சாய்ந்தது.காலம் கடந்து கொண்டிருந்ததை அந்த வண்டு உணரவில்லை.

அந்தி நேரமும் வந்தது.இருள் சூழ்ந்து கொண்டது.மலர்ந்திருந்த தாமரையின் இதழ்கள் மெல்ல மெல்ல  குவி்ய ஆரம்பித்தன.மது மயக்கத்திலிருந்த வண்டு எதையும் அறியவில்லை.அது வெளியேறும் வரை தாமரையும் காத்திருக்கவில்லை.தன் இதழ்களை மூடிக் கொண்டது.

சற்று நேரம் கழித்து மயக்கம் தெளிந்து வண்டு விழித்தது.காரிருளைத் தவிர வேறெதுவும் தென்படவில்லை.இதழ் குவிந்த தாமரையில் மாட்டிக் கொண்டதை உணர சிறிது நேரம் பிடித்தது.ஆனாலும் பதறித் துடிக்கவில்லை.

காரிருள் கழியும்.அதிகாலை மலரும்.பகலவன் வரவை எதிர்கொண்டு தாமரை மீண்டும்  மலரும்.நான் ஆனந்தமாய் வெளியில் பறந்து பாடித் திரிவேன் என பல கனவுகளில் மிதந்தது.
                                         
                                    ஆனால் நடந்தது வேறு!

தாகம் தீர்ப்பதற்காக தடாகத்தில் இறங்கியது யானை ஒன்று.தன் மனம்போன போக்கில் தாமரை மலர்களினைப் பறித்து தடாகத்தின் வெளியே தூக்கி வீசியது.மீண்டும் மலர முடியாது தாமரை இதழ்கள் துவண்டன.அதில் சிறை கொண்ட கருவண்டின் கனவுகள் யாவும் கலைந்தன.

இதே நிலமைதான் மனிதருக்கும்.வாழ்க்கையில் சொத்து சுகபோகங்களையும், பாச நேச உறவுகளையும் தேடி ஓடுகிறோம்.பல தடைகள் வருகின்றன. துன்பங்கள் வதைக்கின்றன.உடனே நம்மை நாமே அறியாமல் பல கனவுகள் காண்கிறோம்.வளமான ஒரு எதிர்காலம் பற்றிய கனவுகளில் மூழ்கின்றோம். காலம் செல்கிறது.கனவுகளில் சில பலிக்கின்றன.பல கனவுகள் கலைகின்றன.கண்டவைகள் கனவுகள்தான் என்பதை உணர மறுக்கிறது மனித மனம்.

கலையும் கனவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதில் தெரியாது அலைகிறோம்.செய்யும் தவறுகளை மறந்து வாழ்வை வெறுக்கிறோம்.கண்ட கனவுகள் கலைந்த ஏக்கத்தில் உறவுகளை வெறுக்கிறோம்.பிரிவுகளை ஏற்கின்றோம்.கடைசியில் நரகத்தை தேடி பயணத்தை தொடர்கிறோம்.

இவையெல்லாம் அவசியமா? இது ஒன்றே புரியாத புதிராய் வாழ்வியலில்...

x_3ce8b052

Sunday 5 August 2012

அந்த ஏழு நாட்கள்...


உன்னை நேசிக்கத் தொடங்கி
அன்றோடு முடிந்திருந்தது
என் வாழ்வையே வானவில்லாய்
மாற்றியிருந்த அந்த ஏழு நாட்கள்...


உன் முகம் பார்த்தறியேன்
உன் குரல் யாசித்தறியேன்
உன்னை மட்டும் அறிந்தேன்
உன்னைத் தான் நேசித்தேன்


அந்த ஏழு நாட்களில்
என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்
யாரிடம் உரைப்பேன்


என் மனவறைக்குள்
நுழைத்திட்ட உன்னை
மணவறையில் சந்திக்கும்
அந்நாளில்...

முதன் முதலாய்
உனை காணும் அந்த திருநாள்
தோழிகள் எனை சீண்ட
வெட்கம் எனை தூண்ட


யாருமறியாது கடைவிழியால்
உன் திருமுகம் நோக்க
உன்விழி மோதிய விபத்தில்
தடுமாறிய என் பெண்மை


புரியாத பாஷையில் அந்தணர்
மந்திரங்கள் வானோக்கி ஒலிக்க
என்னிடம் நீ மாட்டிக் கொண்டதாய்
மறைமுகமாக உரைத்த
மேள தாளங்கள் செவிகளில் இடியிறக்க
உறவுகள் முன்றலில்
உன் திருமங்கலநாண்
என் கழுத்தில் ஏறிட


நன்றியை விழிகளினால் கூறிட
அதை உணர்ந்தவனாய்
என் கரம் தழுவி
உன் காதலை நீ உணர்த்திட
மகிழ்வின் எல்லைக்கே
சென்று வந்த அந்நாள்...


எத்தனை எத்தனை கனவுகள்
எனக்குள்ளும்
உன் நினைவுகளின் ஏக்கங்களுடன்
காத்திருக்கிறேன்
காதலுடன் நீ எனைத் தழுவும்
அந்நாளுக்காய்...



x_3cc5fda9

Sunday 15 July 2012

Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா? -பாகம்-02

வணக்கம் சகோதர சகோதரிகளே. சிறியதொரு இடைவெளியின் பின் என் கதையின் பாகம் இரண்டுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

Love - 02


வேலையில் மூழ்கிய போதும் அவன் நினைவுகள் அவளைச் சுற்றி வதைத்தது.திக்ப்ரமை பிடித்தவள் போல தலையில் கைவைத்தவண்ணம் சிந்தனைகளை எங்கோ சிதற விட்டிருந்தாள்.
       “சாரா செக் எல்லாம் ரெடியா?”...
எக்கவுண்டன் கேட்டது கூட புரியாமல் அமர்ந்திருந்தாள்.
      “சாரா என்னாச்சு உடல்நிலை ஏதாவது சரியில்லையா? வேணுமென்றால் லீவு போட்டு வீட்டுக்கு சென்று ரெஸ்ற் எடுத்துக்கோ”
      ”Sorry Sir.இல்லை பரவாயில்லை.இதோ செக் எல்லாம் ரெடியாச்சு.” என்று சொல்லி அவரிடம் செக் எல்லாவற்றையும் எடுத்துச் சென்று கொடுத்தாள்.
       “சேர் 2 நாள் லீவு வேண்டும்”
              சாரா ஒருநாளும் வேலையில் கவனம் சிதறவிட்டதில்லை.மற்றவர்கள் போல தேவையில்லாம லீவு எடுத்ததுமில்லை.அவள் மேல் அவருக்கு தனி நம்பிக்கை. அப்படிப்பட்டவள் இன்று இவ்வாறு இருந்ததை அவரால் நம்ப முடியவில்லை.மறுப்பேதும் சொல்லாமல் லீவு அனுமதித்துவிட்டார்.
                 லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவளுக்கு மனம் ஓரிடத்தில் நிம்மதியாக மாட்டேன் என்றது.தொண்டைக்குழிக்குள் உணவு இறங்க மறுத்தது.எவரிடமும் பேச மனமின்றி தன் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள்.தியானம்கூட பண்ணிப் பார்த்தாள்பயனேதுமில்லை.இதுவரை அவள் மனதில் இப்படியேதும் குழப்பம் தோன்றியது கிடையாது.அவனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திணறித்தான் போனாள்.2நாள் குழப்பத்தின் பின் ஒரு முடிவுக்கு வந்தாள்.ஆனால் அதை அவனிடம் எப்படி சொல்லிவிடுவது என்பதை மட்டும் கொஞ்சம் யோசித்தாள்.
                  நாட்களைக் கடத்தாது எப்படியாவது இன்று அவனிடம் தன் முடிவைச் சொல்லிவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.
                  வழமையை விட கொஞ்சம் சீக்கிரமே வேலைக்கு தயாராகினாள்.அவன் வேலைக்கு செல்லும் நேரம் முன்பே அறிந்திருந்ததால் அதற்கேற்றவாறு தன்னைத் தயார் படுத்தினாள்.கோயிலுக்கு சென்று விட்டு போகும் வழியில் அவனை சந்தித்து பேசிவிட நேரமும் சரியாக இருக்கும்.
                   அம்மனை வழிபட்டுத் திரும்பிய போது எதிரே அவன் நின்றிருந்தாள். அவள் நினைத்ததும் அவள் முன் அவன்.இதுதான் காதலோ...புரியாமல் அவள் திகைத்தாள்.அவள் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அந்த அம்மனிடம் செல்வது அவன் கண்டிருக்கிறான்.அன்று அவனும் அவளை எதிர்பார்த்தே அங்கு வந்திருந்தான்.
       “மகி, உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?” அவன் கண்களை நோக்கி ஒருவித தயக்கத்துடன் கேட்டாள்.
       “என்ன சாரா, அதுக்காகத்தானே நான் காத்திட்டிருக்கேன். 2 நாளா உன்னை காணாமல் என்னாச்சோ ஏதாச்சோன்னு துடிச்சுப் போட்டன் தெரியுமா? சொல்லு சாரா” அவன் சஸ்பென்ஸ் தாங்காமல் கேட்டான்.
             அவள் தொடர்ந்தாள்.”மகி உங்க காதலை நான் மதிக்கிறன்.அதை நான் மறுக்கல.ஆனா..” என்று சொல்லி இடைநிறுத்தினாள்.
        திகைப்போடு அவளை நோக்கினான்.
  ”மகி இது உங்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனாலும் இதை உங்ககிட்ட சொல்லித்தான் ஆகனும்.உங்களுக்கு தெரியுமா?நான் ஒரு விதவை.”
            அவள் கண்கள் கலங்கியதை அவன் கவனிக்க தவறவில்லை.அவள் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு அவனை நோக்கினாள்.அவன் மலர்ந்த முகம் சிவந்திருப்பதை கண்டு திகைத்தாள்.
      “சாரா, உனக்குத் தெரியுமா? இந்த விசயம் எனக்கு எப்பவோ தெரியும்.உன்னோட பழைய வாழ்வு பற்றி நான் ஏதும் கேட்கப் போறதில்லை.உன் மனசைத் தான் நான் நேசிக்கிறேன்.கடைசி வரை உன்னுடன் சந்தோசமா வாழனும் எனக்கு அது போதும்.” என்று காதலுடன் சொல்லிக் கொண்டே போனான்.
              சாராவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

                                                                                                               
                                                                                                                      காதல் தொடரும்...
x_3cb08678

Thursday 28 June 2012

Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?

கனவுகள் தேடும் அந்திப் பொழுதில் அநேக நமஸ்காரங்களுடன் மீண்டும் நான் உங்கள் சித்தாரா மகேஷ்.


பரபரப்பான காலை நேரம் அது.வழமையை விட அன்று வேலைக்கு தயாராக கொஞ்சம் தாமதமாகிவிட்டிருந்தது.ஆனாலும் சோர்ந்து விடாமல் சைக்கிளை வேகமாகவே எட்டி மிதித்தாள் சாரா.சிந்தனைகள் எங்கோ சென்றுவிட்ட நிலையில் வழமையான பாதை வழியே சென்று கொண்டிருந்தாள்.
                  Good morning.சுயத்தில் மீண்டவளாய் விழித்தாள்.குரல் வந்த வழி நோக்கினாள்.முன்பே அறிமுகமான முகம் பதிலுக்கு புன்னகையுடன் வணக்கம் மொழிந்தாள்.நீங்க “அன்னை நாகா பூட் சிற்றியிலயா வேர்க் பண்றீங்க?” ஆமா என பதிலுரைத்தாள்.என்னை உங்களுக்கு தெரியுமா?என் பெயர்...என அவன் உரையாடிய வண்ணம் தொடர்ந்தான்.தொடரும் உரையாடலை விரும்பாதவளாய் பாதையில் கவனத்தை செலுத்தினாள்.
                 அவனும் அவளை தொடர்ந்தான்.Excuse me,”நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?” திடுக்கிட்டு திரும்பினாள் அவன் பக்கம்.மெல்லிய புன்னகையுடன் அவளைக் காதலுடன் நோக்கினான்.அவன் விழியைத் தொடர முடியாதவளாய் பெண்மைக்கே உரிய நாணத்துடன் தலை குனிந்தாள்.அவள் மெளனத்தை உணர்ந்தவனாய், ”அவசரமில்லை.நீங்க யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க.” சொல்லிவிட்டு அவள் முன்னே தொடர்ந்தான்.அப்போதுதான் அவளுக்கு மூச்சு வந்தது.
                பெருமூச்சுடன் தலை நிமிர்ந்தாள். “என்னங்க உங்க பொட்டு கொஞ்சம் சின்னதாய் இருந்தா ரொம்ப அழகாய் இருக்கும்.” ஏதும் புரியாதவளாய் சிறுபுன்னகையுடன் அவனை நோக்கி தலையசைத்தாள்."Bye.see you later." குறுந்தாடி பூத்த முகத்தில் புன்முறுவலுடன் அவளிடம் விடைபெற்றான்.
                அவன் விடைபெற்ற பின்னரும் அவள் கண்களில் அவன் முகம் நிழலாடியது.அதிகம் படித்திராவிட்டாலும் ஏதோ ஓரளவுக்கு படித்திருந்தான். அரச அலுவலகத்தில் கடமைபுரிகிறான்.பார்க்கும் பெண்கள் கொஞ்சம் தடுமாறிவிடும் அழகும், கண்களில் கனிவும் மிதமாய், கீறிவிட்ட குறுந்தாடி பூத்த புன்முறுவலுடன் அடிக்கடி அவள் வழியில் கடப்பதை அவள் உணராமலில்லை.
                இருந்தும் அவள் மனம் ஒன்றை மட்டும் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டது.தவறியும் காதலில் விழுந்து விடாதே...
                நினைவு திரும்பியவளாய் கடிகாரத்தை பார்த்தாள்.நேரம் 9.15 ஐக் கடந்துவிட்டிருந்ததை உணர்ந்தவளாய் வேகமாக சைக்கிளை மிதித்தாள். அவள் அலுவலகமும் அண்மித்தது.அவன் நினைவை மறந்து வேலையில் மூழ்கினாள்.






x_3c9fa917

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More