This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Thursday 7 February 2013

காதல்னா இதுதாங்க!

இது காதலர் மாதம்னு சொல்றாங்களே.அதனால இந்த மாசம் முழுதும் காதல் பதிவுகள் எழுதலாம்னு நினைக்கிறேன்.என்ன சொல்றீங்க உறவுகளே..?

அண்ணலும் நோக்கினான் 
அவளும் நோக்கினாள் 
கண்ணும் கண்ணும் கலந்தன
காதல் பிறந்தது

 இது அந்தக்காலம்,,,

அண்ணலும் நோக்கியா
அவளும் நோக்கியா
அலைபேசிகள் கலந்தன
காதல் வளர்ந்தது

இது இந்தக்காலம்,,, 

நான் நினைக்கிறேன் இதுதான் காதலா இருக்குமோ..?
*** சின்னஞ்சிறுசுகளின் அன்பு மலர்ச்சி அதன் சந்திப்பில் உண்டாவது தான் காதல்.

*** மனிதாபிமானம் கூடிய, விட்டுக்கொடுத்து இன்பம் காண்கின்ற, மன்னித்து மகிழ்கின்ற, செக்ஸ் அடிப்படையில் தோன்றுகின்ற ஆண், பெண் உறவு தான் இந்தக் காதல்.

*** காதலன் / காதலியின் ஸ்பரிசத்தினால் எவ்வளவு இன்பம் உண்டாகின்றதோ அவ்வளவு இன்பம் அவன் / அவளைப் பற்றி நினைப்பதிலும் உண்டாகின்றது.

*** காதல் சாவில்லாதது.அதற்கு அழகு தெரியாது.

*** ஒருவருக்கொருவர் எவ்வளவு அன்னியோன்யமான காதலர்களாக இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொண்டபின் இல்லற நெறியின் நுணுக்கங்களை அறிந்து நடந்து கொள்ளவில்லையாயின் அவர்களின் காதலின் இனிமையே நாளுக்கு நாள் மறைந்து கொண்டே போகும்.

*** அன்றாடம் எத்தனையோ ஆண்கள் பெண்களைக் காண நேரிடுகிறது.ஆனால் அவர்களில் ஒரு சிலருக்குத்தான் மற்றவர்களைக் கண்டதும் மனதில் கவர்ச்சி உண்டாகிறது.அந்தக் கவர்ச்சியும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் அமையும் போது காதல் பிறக்கிறது.

*** காதலிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டு அதற்காக ஏங்குபவர்களுக்கெல்லாம் அது கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது. ஆனால் அது பற்றியே எண்ணாமலிருப்பவர்களை அது வலியத் தேடி வராதென்று சொல்லவும் முடியாது

*** வார்த்தையின் உதவியில்லாது ஜாடை, கை நெளிவு, உடல் வளைவு, கன்னக்குழிவு, கண்பார்வை இவற்றின் மூலமாக சுலபமாக தன் உள்ளத்து காதல் உணர்வுகளை வெளியிட்டு விடுவார்களாம் பெண்கள்.

காதலின் தூய்மையை காவியங்களில் மட்டும்தான் காண முடியும்னு பெரியவங்க சொல்றாங்க.எனக்கு ஏதும் தெரியலங்க.நான் குட்டிப் பொண்ணுங்க.

x_3d7f9d59 photo x_3d7f9d59_zps619c619b.gif

Saturday 5 January 2013

வீட்டில் இருந்தபடி வருமானம் பெறுவதற்கு இலகுவான ஓர் வழி.

உறவுகளுக்கு புதுவருட நல்வாழ்த்துக்களுடன் நீண்டநாட்களின் நினைவுகளுடன் நான் உங்கள் சித்தாரா.

வீட்டிலிருந்தவாறே வருமானம் ஈட்டிக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் கற்பூர தயாரிப்பு.இது ஒரு பொழுதுபோக்காக இருப்பது மட்டுமன்றி வருமான மூலமாகவும் இருக்கிறது.இன்றைய அவசர உலகத்தில் நாம் இவற்றையெல்லாம் சிந்திப்பதேயில்லை.
கற்பூரம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி நானறிந்த தகவலை விளக்கப் படங்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.

செய்முறை.
முதலில் விளைவு கற்பூர கட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.


அந்த விளைவு கற்பூர கட்டிகளை இவ்வாறு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்பு அரைத்த கற்பூரத்தை சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து  கொள்ளவும்.
இப்போது கலவை தயார்.


சிறிய கரண்டியினால் தேவையான அளவு கற்பூரத்தை அச்சிற்குள் போட வேண்டும்.

அச்சினுள் கலவையை போட்டபின் இவ்வாறு சுத்தியலால் நன்கு அடித்துக் கொள்ளவும்.(உங்கள் பலம் முழுவதையும் காட்ட வேண்டுமென்று அவசியமில்லை.)


                                                    பின்பு அச்சினை தட்டி கற்பூர கட்டியினை வெளியில் எடுத்து கொள்ள வேண்டும்.






பெற்றுக் கொண்ட கற்பூர கட்டிகளை அதற்கென தயாரிக்கப்பட்ட காகிதத்தில் வைத்து இவ்வாறு சுற்றிக் கொள்ள வேண்டும்.

இதோ கற்பூரம் ரெடி.
எவ்வளவு இலகுவான ஓர் வழிமுறை.நீங்க கூட முயற்சி பண்ணிப் பார்க்கலாம்.




கற்பூரம் பற்றிய தகவல்களை  இங்கே பெற்றுக் கொள்ளலாம்.
கற்பூரம்
Photobucket

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More