உயிருக்குள் ஓர் உயிர்
உன்னை வைத்த என் உயிரில்
எவரையும் நிறுத்தி வைக்க முடியலடா
முழுமையான அன்பைக் கூட
நான் அறிந்து கொண்டதும்
உன்னிடத்திலே
எத்தனை பாசத்தினை
நம்மிடையே பகிர்ந்து கொண்டோம்
இப்பொழுதெல்லாம்
என்னை உனக்கு பிடிப்பதில்லை
இருந்தும்
என் மனம் உன்னையே சுற்றுதடா
முன்னெல்லாம் அடிக்கடி
யாரோ என்னிடத்தில் கூறும் வார்த்தை
இன்னமும் என் நெஞ்சிலே
"உனக்கு அவனைத்தானே பிடிக்கும்,
அவனுக்கும் உன்னைத்தானே பிடிக்கும்"
இருந்தும் என்னிடத்தில்தான்
ஏனிந்த கோபம்..?
அடிக்கடி நம்மிடத்தில் தோன்றி மறையும்
சின்னச் சின்ன ஊடல்களெல்லாம்
அன்பின் வெளிப்பாடுதான்
என்பதை அறிந்து கொண்டேனடா
மனசு தடுமாறும் போது கூட
உன் உறவில் மட்டும் மாற்றமில்லை
எதிர்பார்ப்புகள் நிராசையாகின்றபோதும்
உன்னிடம் நான் எதிர்பார்ப்பது
உன் அன்பு ஒன்றே
உன்னிடம் பேச துடிக்கிறது
என் இதயம்
ஏனடா உன்னிடம் மனம்திறந்து பேச
வார்த்தைகள் வர மறுக்குதடா
உன்மீதான அன்பை மட்டும்
வெளிப்படுத்த தெரியவில்லை
ஒரு முறையாவது
வந்து பார்த்துவிட்டு போவாயா
என் மன அறைக்குள்
உனக்காக நான் சேகரித்த
கனவுகள்
உன்னிடம் பகிர நினைத்த
நினைவுகள்
ஒவ்வொன்றும் சிதறிக் கிடக்கின்றன
காத்திருக்கிறேனடா
காலம் கனியும்
உன் மனதில் ஓர் மாற்றம்
நம் வாழ்விலும் ஓர் வேனிற்காலம்
அன்று சேர்வோம்
மீண்டும் ஓர் புதிய வாழ்வின்
ஆரம்பத்தில்
இன்புற்று மகிழ்வோம்.