Saturday 7 May 2011

உயிர் தந்த தாயே இது உனக்காக..............




அன்னையே.....
இன்று உனக்கான நாள்
இன்றுகூட உன்னை 
வாழ்த்த முடியவில்லை  

  என் மனம் உன்னிடம் மட்டுமே
 உன்னை தொலைவில் வைத்து 
பார்ப்பதற்கு மட்டுமே
என் விதி எழுதப்பட்டுவிட்டதே
எத்தனையோ அன்னையர் தினம் 
வந்துதான் கழிகிறது 
உன்னையும் என்னையும் மட்டும்
விதி பிரித்து வைத்து விட்டதே
                                               
 என்ன ஜென்மமடா 
உரிமை இருந்தும் ஏனோ 
உன்னை பாசத்துடன் 
அம்மா என்றழைக்க முடியவில்லை 

இக்கணத்திலிருந்தாவது 
உனக்காக வாழ விரும்புகிறேன்
வந்துவிடு அன்னையே என்னுடன்...... 



ஒரு துளியில் உருவாகி 
உனக்குள்ளே கருவாகி 
உன் ரத்தம் உணவாகி
உன் சதையே உடலாகி  
உயிர் பெற்று வந்தோமம்மா...




7 comments:

அன்னையர் தினத்தில் தாய் குறித்த
தங்கள் பதிவு அருமை
பாடலும் அருமை
நல்ல பதிவு
தொடர வாழ்த்துக்கள்

அருமையான கவிதை, வாழ்க அன்னையர் தினம்...

மிகவும் சிறப்பா இருக்கிறது தங்கள் பதிவு...

தங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்..

உன்னை தொலைவில் வைத்து
பார்ப்பதற்கு மட்டுமே
என் விதி எழுதப்பட்டுவிட்டதே//

சந்தர்ப்பமும், சூழ் நிலைகளும் பிரித்துப் போட்டாலும்-
குஞ்சுகள் இன்றும் வாழ்வதென்னவோ தாய்ப் பறவையின் சூட்டில் தானே..
கவலையை விடுங்கள் சகோ. வெகு விரைவில் ஒன்றாக வாழும் காலம் வரும்!

விரைவில் உங்கள் விருப்பங்கள் நிறைவேறட்டும் சகோதரி....

/////இக்கணத்திலிருந்தாவது
உனக்காக வாழ விரும்புகிறேன்
வந்துவிடு அன்னையே என்னுடன்..////

வரையறை இல்ல
விதிமுறை அவள் பாசம்...
ஒரு முறை சொல்லு
அம்மா என்று
திரு மறை தோற்கும்
தங்கச்சி...

அன்னையின்
அன்பை
அழகாய்
அற்புதமாய்
அளித்தவிதம்
நிறைவு
அன்னை இல்லா
சோகம்
நானும் அறிவேன் தோழி
உங்களின் பொக்கிஷ
பதிவுக்கு
பாராட்டுகள்

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More