Wednesday 13 April 2011

என் உயிரே

 அடுத்தவரின் கவிதைகளை
ரசிக்க மட்டும் தெரிந்த என்னை
கவிதை எழுத வைத்தவனே

அழகிய கவிதையெனத் தோன்றுகிறாய்
ஒவ்வொரு வரியாக எழுதுகிறேன்
முடிய மறுக்கிறது கவிதை 

முதல் பார்வையில் உணரவில்லை
நம் ஜென்ம பந்தத்தை

என் தோழியுடன் பேசிக் கொண்டிருந்தபோது 
என்னைக் கடந்து செல்கையில்
ஏதோ கூறிவிட்டுச் சென்றாயே
நினைவிருக்கிறதா

திகைத்து உன்னை நோக்கிய போது
சிறு புன்னகையுடன் நகர்ந்து சென்றாயே
 அந்த முதல் சந்திப்பு
என் மனதில் இன்னும் பசுமையாய்

அலைபாயும் என் உணர்வுகளுக்கு உரியவனே
நீ அறியாய்
உன் பெயரைத் தவிர
மற்றைய எழுத்துக்கள் என் பேனாவால்
பெரும்பாலும் தவறாகவே எழுதப்படுகின்றன

உன்னை மட்டும் சந்தித்திராவிட்டல்
காதலின் சுவை என்னவென்று அறியாமலே
என் ஆயுள் முடிந்திருக்கும்

விழுதுகள் போல உறவுகள் 
ஓராயிரம் வந்துமென்ன
என் வேரென நீயிருந்தாய்
அதனால் நான் சாய்ந்து விடாதிருந்தேன்

நினைக்க நினைத்தால்
பக்கமாய் இருப்பவர்களை எல்லாம் விட்டுவிட்டு 
தொலைவில் இருக்கும் உன்னை மட்டும்
         முழுமையாக்கி மகிழ்கிறது என் இதயம்.

20 comments:

சந்தோசம் அனுபவிக்கும் கவிதை சூப்பர்...

வாவ்... கலக்கலா எழுதி இருக்கீங்க...

//முடிய மறுக்கிறது கவிதை//
என்றென்றும் இந்த கவிதை முடியாமல் இருக்க வாழ்த்துக்கள்...:)))

இன்ட்லில இணைப்பு குடுங்க ஓட்டு போடனுமில்லையா...

விழுதுகள் போல உறவுகள்
ஓராயிரம் வந்துமென்ன
என் வேரென நீயிருந்தாய்
அதனால் நான் சாய்ந்து விடாதிருந்தேன்


...Simply Superb!

என் உயிரே, காதலின் தொடக்க கால நினைவுகளை மீட்டிப் பார்க்கும் கவிதையாக அமைந்து கொள்கிறது.

இன்றுதான் தங்கள் பதிவின் பக்கம் வந்தேன்
தலைப்பைப் போலவே படைப்புகளும் மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்

கவிதை உள்ளத்து ஆசையாய் சொல்வதாய்....அருமை

கவிதை சூப்பர்

அழகான கவிதை.

/////உன் பெயரைத் தவிர
மற்றைய எழுத்துக்கள் என் பேனாவால்
பெரும்பாலும் தவறாகவே எழுதப்படுகின்றன////

அது உங்களுக்க படிப்பீத்தவருடைய தப்பாக இருக்கலாம் என நினைக்கிறேன்.. எதற்கும் நல்ல தமிழ் வாத்தியாரை பாருங்கள்...

இருந்தாலும் வரிகள் அருமையிலும் அருமை..

@♔ம.தி.சுதா♔
/////உன் பெயரைத் தவிர
மற்றைய எழுத்துக்கள் என் பேனாவால்
பெரும்பாலும் தவறாகவே எழுதப்படுகின்றன////

அது உங்களுக்க படிப்பீத்தவருடைய தப்பாக இருக்கலாம் என நினைக்கிறேன்.. எதற்கும் நல்ல தமிழ் வாத்தியாரை பாருங்கள்...

அண்ணா நீங்க முதல்ல ஒரு நல்லா தமிழ் வாத்தியாரைப் பாருங்கள்.ஓகே...........

நீங்களும் நல்லாதான் எழுதியிக்கீங்க..

>>பக்கமாய் இருப்பவர்களை எல்லாம் விட்டுவிட்டு
தொலைவில் இருக்கும் உன்னை மட்டும்

இதானே உங்க பிரச்சனை.. வீட்டை காலி பண்ணிட்டு அவர் வீட்டுக்குப்பக்கத்துலயே குடி போயிடுங்க. பிராப்ளம் சால்வ்டு. ஹி ஹி

>>>>> Your comment will be visible after approval.

இது வேறயா?

கவிதை சூப்பர்...

//உன்னை மட்டும் சந்தித்திராவிட்டல்
காதலின் சுவை என்னவென்று அறியாமலே
என் ஆயுள் முடிந்திருக்கும்//

.........ரொம்ப நல்லா இருக்குங்க. :)

வாழ்த்துக்கள்

விழுதுகள் போல உறவுகள்
ஓராயிரம் வந்துமென்ன
என் வேரென நீயிருந்தாய்
அதனால் நான் சாய்ந்து விடாதிருந்தேன்
SUPER!!

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More