This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday 28 February 2011

நம்பிக்கையால்........................!


உடலின் வலியின் மத்தியிலும் 
வானம்பாடியாய் 
சிறகினை விரிக்கத்தான் நினைக்கின்றேன்
முடியாமல்..........
சுமைகள் சிறகினை உடைக்கின்றன
விண்மீனாய்
கண் சிமிட்டத்தான் முனைகின்றேன்
கண்கள் இருட்டினுள் 
தொலைந்து போகின்றன 
இதழைப் பிரித்து
புன்னகைக்கவும் முடியவில்லை 
மனதின் காயங்கள் 
மேலும் ரணமாகிப் போவதால்............
இத்தனையும் தாண்டியிங்கு 
வாழத்தான் நினைக்கின்றேன்!
வாழ்வின் ஓர் ஓரத்தில் 
மனதில் புதைந்து போகும் 
எதிர்பார்ப்புகள்
நிஜமாகும் என்னும்
நம்பிக்கையினால்........
 

Wednesday 23 February 2011

பிரிந்து செல்லும் என் பிரியமானவளே(னே)................


என்  ப்ரிய உறவே...................
எங்கிருந்து  வந்தாய்
என்  மனம் ஓடிக்கவென 
நம்மை நாமே  அறிந்து கொள்ளாத
அந்த கணங்களில்
சகோதரி(ரன்) போல என்றாய்
நிஜமாகவே ஆனதனை நீ அறியாயடி(டா)

ஈர் பத்து நாள் கூட கதைத்திராமலே
இதயத்தில்  நீ  இடம்  பிடித்ததுவும்.....
உள்ள கதை அனைத்தையும் 
உன்னிடம்  உளறிக் கொட்டிட 
உயிர் துடித்ததுவும் நீ உணராயடி(டா)............
நிமிஷ முட்களில் இதயம் கிழிந்ததில் 
வடிந்த குருதி துடைக்காமல் 
உன் முகம் காணவென நித்தமும் 
நான் வரத் துடித்ததுவும்- நீயோ 
நீண்டதொரு காலத்திற்கு
நீங்கிட நினைத்ததுவும் 
நியாயம்தானா சொல்லடி(டா)...........
"போகவேண்டாம்"
அலறித் துடித்த என்  மனதின் ஓலம்-உன் 
செவிகளில் ஏறவே இல்லை
என்  விழி சிந்திய கண்ணீர் கடலால்-உன்
மனதும் கரையவே இல்லை  
நீ சென்றுதான் ஆகவேண்டுமானால்
சென்று வா............
என்றோ.............
ஒருநாள் -நீ 
திரும்பி வர முன்
பாசம் வைத்த பாவி உயிர் போயிடினும்
உன் வரவை எதிர் பார்த்து 
கல்லறையின் இருட்டிலும் 
கண்ணிமை திறந்திருப்பேன் 
உன் முத்துப் பற்கள் சிந்தும் 
அந்த உன் இனிய புன்னகைக்காக................ 


Monday 21 February 2011

முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்..................


தாயாய் தந்தையாய், அண்ணனாய் தங்கையாய், தோழனாய் தோழியாய்........
நம் வாழ்விலே எத்தனை நூறு உறவுகள்.
இவை அனைத்தும் ஒன்று சேர ஓர் உருவில் கிடைத்தால்........
அத்தகைய ஓர் உறவுக்காய் என் பயணம் தொடர்கிறது.

                தேடாமல் கிடைத்த உறவு...
                நாடாமல் நாடி வந்த உறவு...
                வாடாமல் காத்து வந்த உறவு...
                சூடாமல் பூத்து நின்ற உறவு...
                உறவுகளுக்கே அர்த்தம் தந்த உறவு...
                பிறவியிலே கிடைக்காத உறவு...
                நானழுதால் தானழுது...
                நான் சிரித்தால் தான் சிரித்து...

தரமுடியுமா தங்களால் மீண்டும் இது போல் ஓர் உறவை........

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More