உறவுகளுக்கு புதுவருட நல்வாழ்த்துக்களுடன் நீண்டநாட்களின் நினைவுகளுடன் நான் உங்கள் சித்தாரா.
வீட்டிலிருந்தவாறே வருமானம் ஈட்டிக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் கற்பூர தயாரிப்பு.இது ஒரு பொழுதுபோக்காக இருப்பது மட்டுமன்றி வருமான மூலமாகவும் இருக்கிறது.இன்றைய அவசர உலகத்தில் நாம் இவற்றையெல்லாம் சிந்திப்பதேயில்லை.
கற்பூரம் தயாரிப்பது எப்படி என்பது பற்றி நானறிந்த தகவலை விளக்கப் படங்களுடன் உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமென நினைக்கிறேன்.
செய்முறை.
முதலில் விளைவு கற்பூர கட்டிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்த விளைவு கற்பூர கட்டிகளை இவ்வாறு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அரைத்த கற்பூரத்தை சிறிதளவு தேங்காய் எண்ணெய் விட்டு கலந்து கொள்ளவும்.
இப்போது கலவை தயார்.
சிறிய கரண்டியினால் தேவையான அளவு கற்பூரத்தை அச்சிற்குள் போட வேண்டும்.
அச்சினுள் கலவையை போட்டபின் இவ்வாறு சுத்தியலால் நன்கு அடித்துக் கொள்ளவும்.(உங்கள் பலம் முழுவதையும் காட்ட வேண்டுமென்று அவசியமில்லை.)
பின்பு அச்சினை தட்டி கற்பூர கட்டியினை வெளியில் எடுத்து கொள்ள வேண்டும்.
பெற்றுக் கொண்ட கற்பூர கட்டிகளை அதற்கென தயாரிக்கப்பட்ட காகிதத்தில் வைத்து இவ்வாறு சுற்றிக் கொள்ள வேண்டும்.
கற்பூரம் பற்றிய தகவல்களை இங்கே பெற்றுக் கொள்ளலாம்.