அன்று...
அவனை முதன்முறையாய் கண்ட நாள்
இருளும் ஒளியும் ஒன்று கூடிடும் நேரம்
என் தோழிகள் சூழ்ந்த நிலையில் நானும் அவனும்
முதல் தடவை சந்தித்தவேளையிலும்
பலநாள் பழகிய ஓர் உணர்வுடன்
தோழமையுடன் கை குலுக்கிக் கொண்டோம்
பாதி வார்த்தைகளாலும் மீதி பார்வைகளாலும்
உணர்வுப் பரிமாற்றம் நடந்தது
அவன் பார்வையில் இருந்த நேசமும்
அவன் அருகாமையில் என்னுள் மலர்ந்த
பெண்மையின் மென்மையும்
ஒரு கணம் சிலிர்க்க வைத்தது
என்னவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில்
இதயமோ துடித்தது
அவனைப் பிரியப் போவதை எண்ணி
மனமோ தவித்தது
பேச வார்த்தைகளின்றி
அவனையே ரசித்தபடியே நின்றிருந்தேன்
அவன் வார்த்தைகள் எதுவும்
என் செவிகளில் விழவேயில்லை
அவன் குரல் மட்டும்
கணீரென ஒழித்துக் கொண்டிருக்க
மௌனமாய் நானிருந்தேன்
யாரோ என்னைத் தட்டும் ஓர் உணர்வில்
திரும்பிப் பார்த்தேன்
என் தோழிகள்
"எல்லோரும் உன்னைத் தேடுறாங்க
வாடி நேரமாச்சு "
பிரிய மனமின்றி அவனும்
போக மனமின்றி நானும்
வேறு வழியின்றி விடை கூறினோம்
அவன் பெயரையும் என் பெயரையும்
இணைத்து வைத்த இறைவன்
இருவரையும் தூரமாக்கி வைத்ததும் ஏனோ?
ஒருவேளை...
இருளும் ஒளியும் ஒன்று கூடிடும் நேரம்
முதன்முறை நாம் சந்தித்ததாலோ...???
ஆம் வானில் முழுமதியும் கதிரவனும்
ஒன்று சேர்வது எப்படி சாத்தியமாகும்?
இருந்தும்...
இறுதிவரை என் காதல்
என் மனவறைக்குள் மட்டுமே
அழிவதெல்லாம் அழியும்
அவன் தந்த என் காதல்
நினைவொன்றைத் தவிர...
10 comments:
அவன் பார்வையில் இருந்த நேசமும்
அவன் அருகாமையில் என்னுள் மலர்ந்த
பெண்மையின் மென்மையும்
ஒரு கணம் சிலிர்க்க வைத்தது
படிக்கும் பொழுது சிலிர்க்க வைக்கிறது.
ஙே....
சொற்களால் சித்திரம் வரைந்திருக்கிறீர்கள் சகோதரி.
இன்றுதான் தங்கள் தளம் வந்தேன்..
அருமையான கவிதை என்னை வரவேற்றது..
இனிமை.
சித்தாரா...இதுவும் காதல்தான்.கவிதை உண்மையானால் வேதனை !
காதல் நினைவலையில் பெண்ணின் மனம்... அருமையான வரிகள் சகோ.... நல்லா இருக்கு...
இறுதிவரை என் காதல்
என் மனவறைக்குள் மட்டுமே
அழிவதெல்லாம் அழியும்
அவன் தந்த என் காதல்
நினைவொன்றைத் தவிர.........intha varikale pothum uyirli pooththa antha kadhalai puriyavaikka, nallarukku sako valththukkal :)
மென்மையான மேன்மை படைப்புக்கு வாழ்த்துக்கள்
உருக்கமான கவிதை உணர்வுகள், கலக்கல்...!!!
ஙே..:)
வாழ்த்துக்கள்
Post a Comment