
அகத்திணைகள் உன்னை நினைந்திட
புறத்திணைகள் ஏனோ தடுக்கிறது!
விடியலில் காண்பேன் - இல்லை
அந்தியில் காண்பேன்
வீதியில் காண்பேன் - இல்லை
கோவிலில் காண்பேன்
அருகினில் காண்பேன் - இல்லை
தொலைவினில் காண்பேன்
புன்முறுவலுடன் காண்பேன் - இல்லை
வீராப்பாய் காண்பேன்.
எத்தனை எத்தனை கற்பனைகள்
உனக்காக காத்திருந்து காத்திருந்து
பொழுதுகள்தான் விடிகின்றன
பெளர்ணமி நிலவில்
உன் செல்லக் குறும்புகளை ரசித்தபடி
உன்னருகில் இவள் கண்ட இன்பமும்
நீ உண்ட உணவில் ஓர் பாதியை
ஊட்டிவிட்ட உன் பாசமும்
இதுவரை பெற்றிடா இன்பமாய்
இவள் உயிரில்...