Thursday 17 March 2011

வெற்றியை நோக்கி.........



உறக்கத்தில் கூட - என் 
தோல்வியின் ஞாபகங்கள்  விடவேயில்லை
தட்டி எழுப்பி 
சோகக்கதை கூறி அழ வைத்தது

வெளிப்பூச்சிற்காய் 
தோல்வியை  மறைத்தாலும்
என்னுள்ளே 
தோல்வியை மறக்கவே முடியவில்லை.

தோல்விக்கு நானே காரணம்
என் கவலைக்கு நானே காரணம் 
வென்றவனை எடை போட 
மறந்ததே காரணம் 

அடி விழுந்தது உண்மை
இனி விடப் போவதில்லை 
தோல்வியே - எனது
வெற்றியின் முதற்படி 

உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன் 
உறைக்கவே எழுந்து விட்டேன் 
இதோ.......
வெற்றி என்னை நோக்கி 
கரம் கூப்பி அழைக்கின்றது.......


 


9 comments:

நம்பிக்கை அளிக்கும் கவிதை..
வாழ்த்துக்கள்..

நன்றி சமுத்ரா.

நன்றி # கவிதை வீதி # சௌந்தர்

விதை தூவும் கவிதை

//உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன்
உறைக்கவே எழுந்து விட்டேன்
இதோ.......
வெற்றி என்னை நோக்கி
கரம் கூப்பி அழைக்கின்றது.......//

வாழ்த்துக்கள்..

வெளிப்பூச்சிற்காய்
தோல்வியை மறைத்தாலும்
என்னுள்ளே
தோல்வியை மறக்கவே முடியவில்லை.

தோல்விக்கு நானே காரணம்
என் கவலைக்கு நானே காரணம்
வென்றவனை எடை போட
மறந்ததே காரணம்

உறக்கத்தில் ஆழ்ந்திருந்தேன்
உறைக்கவே எழுந்து விட்டேன்
இதோ.......
வெற்றி என்னை நோக்கி
கரம் கூப்பி அழைக்கின்றது...
கவிதை நல்லா இருக்கு சகோ...

@ VELU.G
நன்றி....

S Maharajan
நன்றி....

சே.குமார்
நன்றி....

ரேவா
நன்றி....

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More