என் ப்ரிய உறவே...................
எங்கிருந்து வந்தாய்
என் மனம் ஓடிக்கவென
நம்மை நாமே அறிந்து கொள்ளாத
அந்த கணங்களில்
சகோதரி(ரன்) போல என்றாய்
நிஜமாகவே ஆனதனை நீ அறியாயடி(டா)
ஈர் பத்து நாள் கூட கதைத்திராமலே
இதயத்தில் நீ இடம் பிடித்ததுவும்.....
உள்ள கதை அனைத்தையும்
உன்னிடம் உளறிக் கொட்டிட
உயிர் துடித்ததுவும் நீ உணராயடி(டா)............
நிமிஷ முட்களில் இதயம் கிழிந்ததில்
வடிந்த குருதி துடைக்காமல்
உன் முகம் காணவென நித்தமும்
நான் வரத் துடித்ததுவும்- நீயோ
நீண்டதொரு காலத்திற்கு
நீங்கிட நினைத்ததுவும்
நியாயம்தானா சொல்லடி(டா)...........
"போகவேண்டாம்"
அலறித் துடித்த என் மனதின் ஓலம்-உன்
செவிகளில் ஏறவே இல்லை
என் விழி சிந்திய கண்ணீர் கடலால்-உன்
மனதும் கரையவே இல்லை
நீ சென்றுதான் ஆகவேண்டுமானால்
சென்று வா............
என்றோ.............
ஒருநாள் -நீ
திரும்பி வர முன்
பாசம் வைத்த பாவி உயிர் போயிடினும்
உன் வரவை எதிர் பார்த்து
கல்லறையின் இருட்டிலும்
கண்ணிமை திறந்திருப்பேன்
உன் முத்துப் பற்கள் சிந்தும்
அந்த உன் இனிய புன்னகைக்காக................