This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday 9 September 2012

கலைந்த கனவுகள்.

தனிமையின் பிடிகளை தூர வீசி  என் நேசித்த நினைவுகளுடன் நீண்ட நாட்களின் பின் உறவுகளை நாடி அநேக நமஸ்காரங்களுடன் வாழ்வியலின் தத்துவத்தை எனக்கு உணர வைத்த பிறிதொரு பதிவில் சந்திக்கிறேன்.

தெள்ளிய நீர் நிறைந்த அழகிய தாமரைத் தடாகம்.அதில் ஓராயிரம் தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கின.அம்மலர்களின் தேனமுதை பருகுவதற்காக பல வண்டுகள் ரீங்காரமிட்டபடி பறந்து திரிந்தன.அதில் ஒரு கருவண்டு மிதமிஞ்சிய தேனை அருந்திவிட்டு தாமரையில் மதிமயங்கி சாய்ந்தது.காலம் கடந்து கொண்டிருந்ததை அந்த வண்டு உணரவில்லை.

அந்தி நேரமும் வந்தது.இருள் சூழ்ந்து கொண்டது.மலர்ந்திருந்த தாமரையின் இதழ்கள் மெல்ல மெல்ல  குவி்ய ஆரம்பித்தன.மது மயக்கத்திலிருந்த வண்டு எதையும் அறியவில்லை.அது வெளியேறும் வரை தாமரையும் காத்திருக்கவில்லை.தன் இதழ்களை மூடிக் கொண்டது.

சற்று நேரம் கழித்து மயக்கம் தெளிந்து வண்டு விழித்தது.காரிருளைத் தவிர வேறெதுவும் தென்படவில்லை.இதழ் குவிந்த தாமரையில் மாட்டிக் கொண்டதை உணர சிறிது நேரம் பிடித்தது.ஆனாலும் பதறித் துடிக்கவில்லை.

காரிருள் கழியும்.அதிகாலை மலரும்.பகலவன் வரவை எதிர்கொண்டு தாமரை மீண்டும்  மலரும்.நான் ஆனந்தமாய் வெளியில் பறந்து பாடித் திரிவேன் என பல கனவுகளில் மிதந்தது.
                                         
                                    ஆனால் நடந்தது வேறு!

தாகம் தீர்ப்பதற்காக தடாகத்தில் இறங்கியது யானை ஒன்று.தன் மனம்போன போக்கில் தாமரை மலர்களினைப் பறித்து தடாகத்தின் வெளியே தூக்கி வீசியது.மீண்டும் மலர முடியாது தாமரை இதழ்கள் துவண்டன.அதில் சிறை கொண்ட கருவண்டின் கனவுகள் யாவும் கலைந்தன.

இதே நிலமைதான் மனிதருக்கும்.வாழ்க்கையில் சொத்து சுகபோகங்களையும், பாச நேச உறவுகளையும் தேடி ஓடுகிறோம்.பல தடைகள் வருகின்றன. துன்பங்கள் வதைக்கின்றன.உடனே நம்மை நாமே அறியாமல் பல கனவுகள் காண்கிறோம்.வளமான ஒரு எதிர்காலம் பற்றிய கனவுகளில் மூழ்கின்றோம். காலம் செல்கிறது.கனவுகளில் சில பலிக்கின்றன.பல கனவுகள் கலைகின்றன.கண்டவைகள் கனவுகள்தான் என்பதை உணர மறுக்கிறது மனித மனம்.

கலையும் கனவுகளுக்கு யார் பொறுப்பேற்பது என்ற கேள்விக்கு பதில் தெரியாது அலைகிறோம்.செய்யும் தவறுகளை மறந்து வாழ்வை வெறுக்கிறோம்.கண்ட கனவுகள் கலைந்த ஏக்கத்தில் உறவுகளை வெறுக்கிறோம்.பிரிவுகளை ஏற்கின்றோம்.கடைசியில் நரகத்தை தேடி பயணத்தை தொடர்கிறோம்.

இவையெல்லாம் அவசியமா? இது ஒன்றே புரியாத புதிராய் வாழ்வியலில்...

x_3ce8b052

Sunday 5 August 2012

அந்த ஏழு நாட்கள்...


உன்னை நேசிக்கத் தொடங்கி
அன்றோடு முடிந்திருந்தது
என் வாழ்வையே வானவில்லாய்
மாற்றியிருந்த அந்த ஏழு நாட்கள்...


உன் முகம் பார்த்தறியேன்
உன் குரல் யாசித்தறியேன்
உன்னை மட்டும் அறிந்தேன்
உன்னைத் தான் நேசித்தேன்


அந்த ஏழு நாட்களில்
என்னுள் ஏற்பட்ட மாற்றங்கள்
யாரிடம் உரைப்பேன்


என் மனவறைக்குள்
நுழைத்திட்ட உன்னை
மணவறையில் சந்திக்கும்
அந்நாளில்...

முதன் முதலாய்
உனை காணும் அந்த திருநாள்
தோழிகள் எனை சீண்ட
வெட்கம் எனை தூண்ட


யாருமறியாது கடைவிழியால்
உன் திருமுகம் நோக்க
உன்விழி மோதிய விபத்தில்
தடுமாறிய என் பெண்மை


புரியாத பாஷையில் அந்தணர்
மந்திரங்கள் வானோக்கி ஒலிக்க
என்னிடம் நீ மாட்டிக் கொண்டதாய்
மறைமுகமாக உரைத்த
மேள தாளங்கள் செவிகளில் இடியிறக்க
உறவுகள் முன்றலில்
உன் திருமங்கலநாண்
என் கழுத்தில் ஏறிட


நன்றியை விழிகளினால் கூறிட
அதை உணர்ந்தவனாய்
என் கரம் தழுவி
உன் காதலை நீ உணர்த்திட
மகிழ்வின் எல்லைக்கே
சென்று வந்த அந்நாள்...


எத்தனை எத்தனை கனவுகள்
எனக்குள்ளும்
உன் நினைவுகளின் ஏக்கங்களுடன்
காத்திருக்கிறேன்
காதலுடன் நீ எனைத் தழுவும்
அந்நாளுக்காய்...



x_3cc5fda9

Sunday 15 July 2012

Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா? -பாகம்-02

வணக்கம் சகோதர சகோதரிகளே. சிறியதொரு இடைவெளியின் பின் என் கதையின் பாகம் இரண்டுடன் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

Love - 02


வேலையில் மூழ்கிய போதும் அவன் நினைவுகள் அவளைச் சுற்றி வதைத்தது.திக்ப்ரமை பிடித்தவள் போல தலையில் கைவைத்தவண்ணம் சிந்தனைகளை எங்கோ சிதற விட்டிருந்தாள்.
       “சாரா செக் எல்லாம் ரெடியா?”...
எக்கவுண்டன் கேட்டது கூட புரியாமல் அமர்ந்திருந்தாள்.
      “சாரா என்னாச்சு உடல்நிலை ஏதாவது சரியில்லையா? வேணுமென்றால் லீவு போட்டு வீட்டுக்கு சென்று ரெஸ்ற் எடுத்துக்கோ”
      ”Sorry Sir.இல்லை பரவாயில்லை.இதோ செக் எல்லாம் ரெடியாச்சு.” என்று சொல்லி அவரிடம் செக் எல்லாவற்றையும் எடுத்துச் சென்று கொடுத்தாள்.
       “சேர் 2 நாள் லீவு வேண்டும்”
              சாரா ஒருநாளும் வேலையில் கவனம் சிதறவிட்டதில்லை.மற்றவர்கள் போல தேவையில்லாம லீவு எடுத்ததுமில்லை.அவள் மேல் அவருக்கு தனி நம்பிக்கை. அப்படிப்பட்டவள் இன்று இவ்வாறு இருந்ததை அவரால் நம்ப முடியவில்லை.மறுப்பேதும் சொல்லாமல் லீவு அனுமதித்துவிட்டார்.
                 லீவு போட்டுவிட்டு வீட்டுக்கு வந்தவளுக்கு மனம் ஓரிடத்தில் நிம்மதியாக மாட்டேன் என்றது.தொண்டைக்குழிக்குள் உணவு இறங்க மறுத்தது.எவரிடமும் பேச மனமின்றி தன் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள்.தியானம்கூட பண்ணிப் பார்த்தாள்பயனேதுமில்லை.இதுவரை அவள் மனதில் இப்படியேதும் குழப்பம் தோன்றியது கிடையாது.அவனை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் திணறித்தான் போனாள்.2நாள் குழப்பத்தின் பின் ஒரு முடிவுக்கு வந்தாள்.ஆனால் அதை அவனிடம் எப்படி சொல்லிவிடுவது என்பதை மட்டும் கொஞ்சம் யோசித்தாள்.
                  நாட்களைக் கடத்தாது எப்படியாவது இன்று அவனிடம் தன் முடிவைச் சொல்லிவிட வேண்டும் என்று உறுதியாக இருந்தாள்.
                  வழமையை விட கொஞ்சம் சீக்கிரமே வேலைக்கு தயாராகினாள்.அவன் வேலைக்கு செல்லும் நேரம் முன்பே அறிந்திருந்ததால் அதற்கேற்றவாறு தன்னைத் தயார் படுத்தினாள்.கோயிலுக்கு சென்று விட்டு போகும் வழியில் அவனை சந்தித்து பேசிவிட நேரமும் சரியாக இருக்கும்.
                   அம்மனை வழிபட்டுத் திரும்பிய போது எதிரே அவன் நின்றிருந்தாள். அவள் நினைத்ததும் அவள் முன் அவன்.இதுதான் காதலோ...புரியாமல் அவள் திகைத்தாள்.அவள் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் அந்த அம்மனிடம் செல்வது அவன் கண்டிருக்கிறான்.அன்று அவனும் அவளை எதிர்பார்த்தே அங்கு வந்திருந்தான்.
       “மகி, உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா?” அவன் கண்களை நோக்கி ஒருவித தயக்கத்துடன் கேட்டாள்.
       “என்ன சாரா, அதுக்காகத்தானே நான் காத்திட்டிருக்கேன். 2 நாளா உன்னை காணாமல் என்னாச்சோ ஏதாச்சோன்னு துடிச்சுப் போட்டன் தெரியுமா? சொல்லு சாரா” அவன் சஸ்பென்ஸ் தாங்காமல் கேட்டான்.
             அவள் தொடர்ந்தாள்.”மகி உங்க காதலை நான் மதிக்கிறன்.அதை நான் மறுக்கல.ஆனா..” என்று சொல்லி இடைநிறுத்தினாள்.
        திகைப்போடு அவளை நோக்கினான்.
  ”மகி இது உங்களுக்கு அதிர்ச்சியாக கூட இருக்கலாம். ஆனாலும் இதை உங்ககிட்ட சொல்லித்தான் ஆகனும்.உங்களுக்கு தெரியுமா?நான் ஒரு விதவை.”
            அவள் கண்கள் கலங்கியதை அவன் கவனிக்க தவறவில்லை.அவள் ஒருவாறு சுதாரித்துக் கொண்டு அவனை நோக்கினாள்.அவன் மலர்ந்த முகம் சிவந்திருப்பதை கண்டு திகைத்தாள்.
      “சாரா, உனக்குத் தெரியுமா? இந்த விசயம் எனக்கு எப்பவோ தெரியும்.உன்னோட பழைய வாழ்வு பற்றி நான் ஏதும் கேட்கப் போறதில்லை.உன் மனசைத் தான் நான் நேசிக்கிறேன்.கடைசி வரை உன்னுடன் சந்தோசமா வாழனும் எனக்கு அது போதும்.” என்று காதலுடன் சொல்லிக் கொண்டே போனான்.
              சாராவுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.

                                                                                                               
                                                                                                                      காதல் தொடரும்...
x_3cb08678

Thursday 28 June 2012

Excuse me நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?

கனவுகள் தேடும் அந்திப் பொழுதில் அநேக நமஸ்காரங்களுடன் மீண்டும் நான் உங்கள் சித்தாரா மகேஷ்.


பரபரப்பான காலை நேரம் அது.வழமையை விட அன்று வேலைக்கு தயாராக கொஞ்சம் தாமதமாகிவிட்டிருந்தது.ஆனாலும் சோர்ந்து விடாமல் சைக்கிளை வேகமாகவே எட்டி மிதித்தாள் சாரா.சிந்தனைகள் எங்கோ சென்றுவிட்ட நிலையில் வழமையான பாதை வழியே சென்று கொண்டிருந்தாள்.
                  Good morning.சுயத்தில் மீண்டவளாய் விழித்தாள்.குரல் வந்த வழி நோக்கினாள்.முன்பே அறிமுகமான முகம் பதிலுக்கு புன்னகையுடன் வணக்கம் மொழிந்தாள்.நீங்க “அன்னை நாகா பூட் சிற்றியிலயா வேர்க் பண்றீங்க?” ஆமா என பதிலுரைத்தாள்.என்னை உங்களுக்கு தெரியுமா?என் பெயர்...என அவன் உரையாடிய வண்ணம் தொடர்ந்தான்.தொடரும் உரையாடலை விரும்பாதவளாய் பாதையில் கவனத்தை செலுத்தினாள்.
                 அவனும் அவளை தொடர்ந்தான்.Excuse me,”நீங்க யாரையாச்சும் Love பண்றீங்களா?” திடுக்கிட்டு திரும்பினாள் அவன் பக்கம்.மெல்லிய புன்னகையுடன் அவளைக் காதலுடன் நோக்கினான்.அவன் விழியைத் தொடர முடியாதவளாய் பெண்மைக்கே உரிய நாணத்துடன் தலை குனிந்தாள்.அவள் மெளனத்தை உணர்ந்தவனாய், ”அவசரமில்லை.நீங்க யோசிச்சு நல்ல முடிவா சொல்லுங்க.” சொல்லிவிட்டு அவள் முன்னே தொடர்ந்தான்.அப்போதுதான் அவளுக்கு மூச்சு வந்தது.
                பெருமூச்சுடன் தலை நிமிர்ந்தாள். “என்னங்க உங்க பொட்டு கொஞ்சம் சின்னதாய் இருந்தா ரொம்ப அழகாய் இருக்கும்.” ஏதும் புரியாதவளாய் சிறுபுன்னகையுடன் அவனை நோக்கி தலையசைத்தாள்."Bye.see you later." குறுந்தாடி பூத்த முகத்தில் புன்முறுவலுடன் அவளிடம் விடைபெற்றான்.
                அவன் விடைபெற்ற பின்னரும் அவள் கண்களில் அவன் முகம் நிழலாடியது.அதிகம் படித்திராவிட்டாலும் ஏதோ ஓரளவுக்கு படித்திருந்தான். அரச அலுவலகத்தில் கடமைபுரிகிறான்.பார்க்கும் பெண்கள் கொஞ்சம் தடுமாறிவிடும் அழகும், கண்களில் கனிவும் மிதமாய், கீறிவிட்ட குறுந்தாடி பூத்த புன்முறுவலுடன் அடிக்கடி அவள் வழியில் கடப்பதை அவள் உணராமலில்லை.
                இருந்தும் அவள் மனம் ஒன்றை மட்டும் அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டது.தவறியும் காதலில் விழுந்து விடாதே...
                நினைவு திரும்பியவளாய் கடிகாரத்தை பார்த்தாள்.நேரம் 9.15 ஐக் கடந்துவிட்டிருந்ததை உணர்ந்தவளாய் வேகமாக சைக்கிளை மிதித்தாள். அவள் அலுவலகமும் அண்மித்தது.அவன் நினைவை மறந்து வேலையில் மூழ்கினாள்.






x_3c9fa917

Tuesday 12 June 2012

எனக்கும் ஓர் காதல் வேண்டும்.

மீண்டும் ஒரு இனிய மாலைப்பொழுதில் என் கனவில் பூத்த என் காதலுடன் உங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.


செல்லக் குறும்புகளால்
என் காதோரம்
சில்வண்டாய் ரீங்காரம் பாடிட

சொல்லம்புகளால்
என் செல்களை துளைத்திட

துக்கம் கொண்டு 
நெஞ்சினில் சாய்கையில்
தென்றலாய் என் தலை கோதிட 
கடற்கரை மணலில் 
அவன் தோளுரசி 
காலார நடை பயின்றிட
முழு நிலாப்பொழுதில் 
நிலாச் சோற்றை என் கையால் 
அவனுக்கு ஊட்டிட
ஓர் திருவிழா மாலையில் 
நல்லூர் மணலில் 
என்னோடமர்ந்து சுண்டல்
சுவைத்து மகிழ்ந்திட
என் ஊர்த் தெருவில்
பார்ப்போர் கண்விரிய
அவன் கை கோர்த்து
நகர்வலம் சென்றிட
என் கண்களினால் காதல் பேசி 
கவிதைகளால் 
அவன் உள்ளமதை உரசிட
என்னை மட்டும் நேசித்து
எனக்காக மட்டும் சுவாசித்திட
என் காதலை அவன் மறந்து 
அவன் நினைவினில் மட்டும் வாழ்ந்திட
இவையெல்லாம் நிகழ்ந்திட
கனவில் மட்டும் 
எனக்கும் ஓர் காதல் வேண்டும்...

x_3c8f649c

Tuesday 5 June 2012

விடுகதையாய் தொடரும் உறவுகள்.



அனைவருக்கும் என் அநேக நமஸ்காரங்கள்.

நீண்டதொரு இடைவெளியின் பின் தங்களைச் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி.நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இன்பமாய் கழிந்து கொண்டிருந்த என் வாழ்வில் ஒரு புயலடித்து ஓய்ந்தமாதிரி ஒருவாறு தடைகளையெல்லாம் தகர்த்தெறிஞ்சு சுமூகமான ஒரு நிலைக்கு வந்தாச்சு.(நான் வேலையை சொன்னேங்க). இனி எந்த தடையுமின்றி வலையுலகத்தை ஒரு வலம் வரலாமென்று நினைக்கிறேன்.(இது எத்தனை நாளைக்கென்று பார்க்கலாம் ஹ ஹ ஹ ஹா என்று யாரோ மனசுக்குள்ளே சிரிக்கிறதும் எனக்கு கேட்குதுங்கோ- அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா)

நீண்ட நாளா என் மனச குடைஞ்சு கொண்டிருந்த ஒரு விடயம் என்னவென்றால்,

* அண்ணன் தங்கை பாசமென்றது எந்தளவுக்கு உண்மையானது?
* ஒரு அண்ணன், தங்கை மேல வச்சிருக்கிற நேசம் உண்மையானதா, ஒரு தங்கை, அண்ணன் மேல வச்சிருக்கிற நேசம் உண்மையானதா?
* இவை வாழ்வின் இறுதிவரை புரிந்துணர்வுடன் தொடருமா இல்லை இளமைக் காதல் போன்று பாதியில் நேசம் உடைந்து போவதா?

சிறு வயதில் இருந்தே அண்ணன் என்றாலே கொள்ளைப் பிரியம்.எவரிடமும் விட்டுத்தர மாட்டேன்.அவனை யாராவது ஏதும் சொன்னால் அவர்களை இரண்டில் ஒன்று பார்த்து விட்டுத்தான் மறு வேலை.

உதாரணமாக, நானே வீட்டின் கடைக் குட்டி (இது எனக்கு நானே வச்சுக் கொண்ட பெயர்) என்பதால் ஏதாவது தின்பண்டம் பகிரும் பொறுப்பு என்னிடமே அதிகம் வருபதுண்டு.அப்போதெல்லாம் முதலில் அண்ணனுக்கென்று எடுத்து வச்சிடுவன்.அதை யார் கேட்டாலும் தரமாட்டேன்.இப்போது கூட அவனுக்கென்று ஒரு பொருள் வாங்கினால் அதை பயன்படுத்த எவரையும் அனுமதிக்க விடமாட்டேன். இதனால எனது அக்காவுக்கும் எனக்கும் அடிக்கடி சண்டையும் நடக்கும்.அவ கூட அடிக்கடி சொல்வதுண்டு.உனக்கும் அண்ணனைத்தானே பிடிக்கும்.அவனுக்கும் உன்னைத்தானே பிடிக்கும்.(இந்த இடத்தில அக்கா கொஞ்சம் யோசிக்கணும்).

உலகத்தில அண்ணன் தங்கை பாசம்தான் இருக்கணுமா? ஏன் அக்கா தம்பி பாசம்கூட இருக்கலாம்தானே? அப்போதெல்லாம் இதை பெரிதாக எடுத்துக்கிறதில்ல.இப்ப யோசிச்சுப் பார்க்கிறப்போ எனக்கு தோணும்.
அண்ணன் மேல இருக்கிற பிரியத்தில எந்தவொரு வயதுக்கு மூத்த ஆணென்றாலும் உடனே அண்ணா என்றுதான் அழைப்பதுண்டு.என்னதான் ஒரு பெண் அண்ணனாக நினைத்து பழகினாலும் எல்லா ஆண்களும் பெண்களை ஒரு தங்கையாய் நினைப்பதில்லை (இது காலம் கடந்த ஞானம்).

அண்ணாவுக்கும் எனக்குமிடையில் எத்தனையோ சிறு சிறு சண்டைகள் வருவதுண்டு.அடுத்த நிமிசமே அவன் மேல் இருந்த கோபம் மாறி அண்ணா என்று அவனிடம் ஓடிடுவேன்.அக்காகூட ஊடல் கொண்டு பல நாள் பேசாதிருந்தது அன்றுமுண்டு இன்றுமுண்டு.

இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, இதுவரை இருவருமே உள்ளத்தில் மறைத்து வைத்திருந்த பாசத்தை வெளிக்காட்டியதில்லை.அண்ணன் மேலிருந்த பாசங்கள் கற்பனைக் கோட்டைகளைத் தாண்டி சில வேளைகளில் ஏக்கங்களானதுமுண்டு.

எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அண்ணன், தங்கைகளை பார்க்கும் போது சிரித்துக் கொண்டதுண்டு.எப்போதும் அடிபட்டு மனதை காயப்படுத்திக் கொள்ளாமல் மனதோடு பாசம் இருந்தாலும் அளவோடு பாசத்தை வெளிப்படுத்துவது எவ்வளவு நல்லதென்று.

ஆனால் இப்போதுதான் மனம் தெளிவடைந்தது.பாசங்களை வெளிப்படுத்தாது மனசுக்குள் பூட்டி வைப்பதை விட செல்லச் சண்டைகளின் வலிகளின் பின்னால் இருவருக்குமிடையிலான புரிந்துணர்வுடன் கூடிய இன்பமும் உள்ளது.இதை உணரும்போதே அதன் இனிமை புரியும்.

என்னைப் பொறுத்தவரை புரிந்துணர்வுடன் தொடரும் அண்ணன் தங்கை நேசமென்பது, உயிருள்ளவரை தொடரும் உறவாகத்தான் இருக்கும் என்பது உறுதியே.கால ஓட்டங்களில் திசைமாறிச் செல்லும் வாழ்க்கையிலும் தொடரும் உறவாகவே இந்த நேசம் நிலைக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.



ஆசையோடு தடவிடும் கையில்
யானைகூட அடங்கிடும் நொடியில்
உறவை மனது சேரும்போது
பெருகிடும் சுகமே

பிழை எப்போது உலகினில் பிறந்திடும்
கரம் பற்றாத பொழுதினில் வளர்ந்திடும்
துளி கண்ணீரிலே கண்ணீரிலே
அடடா சந்தோசமே....



Photobucket

Thursday 24 May 2012

எந்தன் பொன்வண்ணமே...


அகத்திணைகள் உன்னை நினைந்திட
புறத்திணைகள் ஏனோ தடுக்கிறது!

விடியலில் காண்பேன் - இல்லை
அந்தியில் காண்பேன்
வீதியில் காண்பேன் - இல்லை
கோவிலில் காண்பேன்
அருகினில் காண்பேன் - இல்லை
தொலைவினில் காண்பேன்
புன்முறுவலுடன் காண்பேன் - இல்லை
வீராப்பாய் காண்பேன்.

எத்தனை எத்தனை கற்பனைகள்
உனக்காக காத்திருந்து காத்திருந்து
பொழுதுகள்தான் விடிகின்றன

பெளர்ணமி நிலவில்
உன் செல்லக் குறும்புகளை ரசித்தபடி
உன்னருகில் இவள் கண்ட இன்பமும்
நீ உண்ட உணவில் ஓர் பாதியை
ஊட்டிவிட்ட உன் பாசமும்
இதுவரை பெற்றிடா இன்பமாய்
இவள் உயிரில் நிறைந்திடவும்,

உன்னோடு சேர்ந்து நடக்கையில்
உறவுகள் கண்கள் விரிய
எமை நோக்கையில்
பெருமிதத்தில் கொஞ்சம்
கர்வம் தலைக்கேறியதும் ஓர்நாள்!

காரணமேதுமின்றி நாம் போடும்
செல்லச் செல்லச் சண்டைகள்
பிரிவின் பின் உயிர்ப்பாய் கூடிடும் வேளை
நாம் காணும் இன்பம்!

மரண ஓலங்களுடன்
சுற்றி ஆயிரம் உறவுகள்
ஏனோ நீ மட்டும்
எங்கோ தொலைவினில்
தீண்டத்தகாதவனாய்???

தினம் தொடரும் கனாக்களின் யுத்தத்தில்
விடிந்தும் விடியாத பொழுதுகளை
வரமாக எண்ணி,

கண்கள் பூத்து நரை தவழும்
அந்த நாளுக்காய் காத்திருக்கிறது
என் வாழ்வு!!!



x_3c3f863d

Saturday 24 March 2012

என் மனதை நீயறியும் நாளெதுவோ....



நீ தந்த நினைவுப் பரிசு 
ஒன்று மட்டுமே 
யாருமறியாது 
எப்போதும் என்னுடனே...


எப்போதும் உன்னையே 
முதலாய் எண்ணியவளிடம் 
எப்படி உரைத்தாய் 
என் முடிவே நீதானென்று...

விலகிடு விலகிடு என்றாயே 
மறுக்கவில்லை 
ஒற்றை வார்த்தையில் உரைத்துவிடு 
எனை மறந்து நீ
மகிழ்வாயென்று... 
உன்னை மறக்க உரைத்த நீ 
மறக்கும் வழியை மட்டும் 
உரைக்க மறுத்ததேன் 
எப்படி முடியும் 
நீயே அறியாததை...


அலை வந்து அழிப்பதைஅறிந்தும் 
கரை மணலில் எழுதும் சிறுமி போல் 
நீ வந்து அழிக்க வேண்டுமென்பதற்காகவே 
வாசலில் தவம் கிடக்கும் 
நான் கிறுக்கும் கிறுக்கல்கள்..

வேடன் விரித்த வலையில் 
சிக்கிய குருவி 
பத்திரமாய் திரும்பி 
மறுபடியும் மாட்டிக் கொண்டது 
மீள் முடியா பாசவலையில்...


சிறகுகள் விரிந்தன 
பறவைக்கோ மனமில்லை பறந்திட 
முடிவில் ஒடித்துக் கொண்டது 
தானே தன் சிறகினை... 

கடவுளிடம் எப்போதும் மன்றாடுவேன் 
மீண்டும் மீண்டும் 
பாவியாய் பிறக்க வேண்டும் 
அங்கும் உனைத் தேடித் தேடி 
அலைய வேண்டும் 
முடிவில் உன் மடியில் 
உயிர் பிரிய வேண்டும்...
வாழ்வு பறிபோன போது கூட 
கலங்கினதில்லை 
இப்போது மட்டும் எதற்காக? 
உனக்காவது புரிகிறதா?



எப்போதும்  
தனிமையை விரும்பும் உன்னிடத்தே 
 எப்படி உரைப்பேன்   
நான் உன்னிடம் வெறுப்பது  
அது ஒன்றே...

x_3c3f863d

Sunday 18 March 2012

மகிழ்வான வாழ்வுக்கு எளிதான சில வழிமுறைகள்.



  • உங்க வாழ்க்கை எப்பவுமே உங்க கையிலேதான் தங்கியிருக்கிறது.அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
  • எப்போதும் மற்றவர்களில் தங்கியிருக்கலாம் என்ற எண்ணத்தை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
  • உங்க மனசுக்கு சரியென்று தோன்றுவதை பண்ணுங்கள்.ஆனால் ஏனையவர்களது மனநிலையையும் புரிந்துகொண்டு செயற்படுங்கள்.
  • மனசாட்சிக்கு விரோதமான எந்தவொரு காரியத்தையும் மேற்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
  • எல்லோரும் உங்க விருப்பப்படி நடந்து கொள்ளணும்னு கட்டுப்படுத்தாதீங்க.மற்றவங்க விருப்பு வெறுப்புகளையும் உணர்ந்து பாருங்க.
  • உறவுகளிடம் எல்லா விடயங்களிலும் விட்டுக் கொடுத்துப் பழகிக் கொள்ளுங்க.
  • அதிகமாக எதையும் எதிர்பார்ப்பதை குறைத்துக் கொள்வதைவிட தவிர்த்துக் கொள்ளுங்க.
  • உறவுகளின் எதிர்பார்ப்புகளை முடிந்தவரை நிறைவேற்றிப் பழகுங்க.
  • எல்லோரும் உங்களுக்காக மட்டும் வாழனும்னு எதிர்பார்க்காதீங்க.
  • உங்க கடமைகளை சரிவர செய்து முடியுங்க.
  • தவறுகள்,தப்புகள் பண்ணுவதை முடிந்தவரை குறைத்துக் கொள்ளுங்கள்.
  • தவறுகளை உணரும்பட்சத்தில் மன்னிப்பு கேட்கத் தவறாதீர்கள்.
  • பழிவாங்கும் எண்ணங்களை கைவிடுங்கள்.
  • உறவுகளைப் பிரித்து வைக்க நினைக்காதீங்க.முடிந்தால் பிரிந்த உறவுகளை இணத்து வைக்க முயலுங்க.
  • உங்க மனசை மகிழ்வாக வைச்சிருப்பதோடு உங்கள சுற்றியிருக்கும் இடத்தையும் மகிழ்ச்சியாக வைச்சிருங்க.
அன்பு ஒன்றே உன்னதமான வாழ்வின் எல்லை.முடியாததென்பது கிடையாது.முயன்று பார்த்தால் எதுவும் முடியும்.

Thursday 8 March 2012

அன்பு அண்ணனுக்கு பாசமாய் இனிய வாழ்த்து.

x_3c2f33f7


அன்பு காட்டுகையில் அண்ணனாய் 
அறிவுரை கூறுகையில் தந்தையாய்
நெறிப்படுத்துகையில் நல்லாசானாய்
துன்பம் நேர்கையில் தோழனாய்
அநியாயங்களை தட்டி கேட்பதில் வீரனாய் 
குறும்புகளை ரசிக்கையில் குழந்தையாய் 
புன்சிரிப்புடன் என்றும் உலாவரும்
என் அன்பு குட்டி அண்ணா,

நீ பதிவுலகில் மட்டுமல்ல 
என்றும் பார் போற்றும் தலைமகனாய் 
இந்நாளல்ல எந்நாளும்
புன்னகையுடன் நலமாக வாழ
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

கடலில் எழுந்து கரையில் அழியும் 
அலையல்ல பாசமென்பது
உடைந்த அலைகள் உயிர் பெற்று 
மீண்டும் கடலை சேர்வது போல
உன் பாசம் கூட
சிறு சிறு பிரிவுகளின் பின்
துளிர்விடத்தான் செய்கிறது.

இன்று (08.03.2012 )பிறந்தநாள் கொண்டாடும் என் அன்பு அண்ணன் ம.தி.சுதாவிற்கு அன்புத் தங்கையின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

x_3c2f8cc4

Thursday 9 February 2012

சின்னச் சின்னதாய் நினைவுகள்.

நெடுநாட்களுக்கு அப்புறம் இன்று நிம்மதியைத் தேடி எங்க ஊர் கோயிலுக்கு சென்றேன்.எதற்காகவென்று தோன்றவில்லை.ஆனாலும் வேண்டிட கடவுளை தேடினேன்.எங்கு பார்த்தும் கடவுள் தோன்றவில்லை.எல்லாமே நீயாகவே தோன்றியது.மனம் வழிபாட்டில் ஒருமுகமாட்டேன் என அடம்பிடித்தது.அது கூட உன் மனமாச்சே.ஒருவாறு போராடி வென்று விட்டேன்.
கோயிலில் பல அறிந்த முகங்கள்.ஏனோ பேச மனமின்றி அங்கும் சிறு புன்னகையுடன் தனிமையையே நாடினேன்.என் மனம் புரிந்தவர்களாய் விலகினார்கள்.கூட்டத்தை தவிர்த்து ஓரிடத்தில் போய் அமர்ந்து கொண்டேன்.மனதை வேறு பாதையில் திருப்புவதற்காக வேடிக்கையில் கவனம் செலுத்தினேன்.அங்கு கண்ட ஓர் காட்சி கண்ணில் நீர் துளிர்க்க வைத்து விட்டது.
ஒரு அழகான சிறு பெண் குழந்தை.நான் நினைக்கிறேன் அதற்கு இரண்டு வயது இருக்கலாம்.ஏற்கெனவே பெண் குழந்தையென்றால் ரொம்பவே இஷ்ரம்.பார்த்ததுமே அக் குழந்தையை ரொம்பவே பிடித்திருந்தது.அப்போது முதல் அக்குழந்தையை சுற்றியே என் கண்கள் வட்டமிட்டுக் கொண்டன.அதன் குறும்புகளை ரசித்தபடியே அமர்ந்திருந்தேன்.
அப்போது மூன்று வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவன் அக்குழந்தை முன் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.குழந்தையும் மிகவும் சந்தோசமாய் அவன் விளையாட்டினை பார்த்து கைகொட்டி ரசித்திருந்தது.நேரமானதால் அச்சிறுவனை அவன் தாயார் அழைக்கவே ஓடினான்.அடுத்த நொடி அக்குழந்தையின் சின்னஞ்சிறு அழகிய பூ முகம் சிவந்துவிட்டது.அச் சிறுவன் ஓடிய திசையை நோக்கியே அண்ணா அண்ணா என அழைத்தபடி அழுதது.சிறுவனுக்கு தன்னைத் தான் பாசமாய் அக்குழந்தை அப்படி அழைக்கிறது என்பது புரியவில்லை.ஒருவேளை அவன் தங்கை இருந்திருந்தால் அக்குழந்தை நிலையினை புரிந்திருப்பானோ?அச் சிறுவன் சென்று மறைந்துவிட்டான்.சிறிது நேரம் அவன் போன திசையை பார்த்து அழுதபடியே நின்றிருந்தது.
ஒரு நிமிடம் என் இதயம் துடிப்பது நின்றுவிட்ட உணர்வு. அக்குழந்தைக்காகவோ, இல்லை எதற்காகவோ தெரியவில்லை என்னை அறியாமேலே என் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவென கொட்டியது.யாரும் அறியமுதல் அதனை அழித்துக் கொண்டேன்.கண்டவுடன் யார்மீதும் உறவு சொல்லி பாசம் வையாதே.அதன்பின் உன் கண்ணில் நீரையே காணமாட்டாய். ஓடிப் போய் அக்குழந்தையிடம் இவ்வாறு சொன்னாலென்ன என தோன்றியது.இருபது வயதே புரியாத குழந்தை வயசாய் தடுமாறும் நிலையில் இரண்டு வயது குழந்தையிடம் சொல்லி என்னாவது?

நிம்மதியைத் தேடி கோயில் சென்றேன்.இருந்த கொஞ்ச நிம்மதியையும் இழந்துவிட்டுத் திரும்பி வந்தேன்.



Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More