This is default featured post 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured post 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Saturday 31 December 2011

வசந்தம் என் வாசல் நாடிவந்த நாளும், என் இறுதிப் பயணமும்....


முதலில் மலரப் போகும் புதியதோர் ஆண்டு அனைவருக்கும் இனியதொரு ஆண்டாக திகழட்டும்.

அடுத்து எனது பதிவுக்கு வருகிறேன்.எல்லோருக்கும் வாழ்வில் ஏதோ ஒரு மறக்க முடியாத நிகழ்வு என்பது இருக்கும்தானே?பழையன கழிதலும் புதியன புகுதலும் உலக வாழ்வியலின் நியதி.இன்று,வருட இறுதி நாள்.நாளை மலரப் போகும் புதிய வருடத்தை வரவேற்பதில் எல்லோரும் ஆனந்தமாக ஒன்று கூடும் நன்னாள்.

இதே போல் ஓர் நாள்தான் என் வாழ்வில் மறக்க முடியாத நாள். 31.12.2010. அன்றுதானே முதன் முதலாய் நீயும் நானும் சந்தித்துக் கொண்டோம்.நீயும் நானும் போட்டி போட்டுக் கொண்டு புதிய ஆண்டை வரவேற்றுக் கொண்டோம்.

அன்று எவ்வளவு சந்தோசமா இருந்தோம்.அதே போல் இன்றும் போட்டி போட்டுக் கொண்டு பிரிவை வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.என் மீதான் உன் பாசத்தின் முன் உன் மீதான என் பாசம் என்றுமே தூசிதான் என்பதை உணர்ந்து கொண்டேன்.எப்போதும் நீ ஜெயிப்பவனாகவும் நானே தோற்பவளாகவுமே இருந்திருக்கிறோம்.

என்னை நான் புரிந்து கொண்டதால் பிடிவாதக்காரியாகவும் என்னை நீ புரிந்து கொண்டதால் சுயநலக்காரியாகவும் மாறினேன்.என்னை நியாயப்படுத்திக் கொள்ள நான் விரும்பவில்லை.அதையும் நீ அறிந்து கொள்ளப் போவதுமில்லை.என் நிலையை உனக்குப் புரிய வைப்பதற்கும் எனக்கு யாருமில்லை.என்றோ ஓர் நாள் என்னையும் என் நேசத்தையும் நீ புரிவாய்.அன்று உன் அருகில் நிச்சயம் இருக்கப் போவதுமில்லை.என்னை ஜெயித்த உன் சந்தோசம் மட்டும் எனக்கு போதும்.

நாளை மலரப் போகும் புத்தாண்டு உன் வாழ்வில் புத்தொளி வீச என் இதயம் மலர்ந்து உன்னை வாழ்த்திச் செல்கிறேன். 


உறக்கத்தை தொலைத்தேன்
உறவுகளை மறந்தேன் 
என் பெற்றோரையும் 
மற்றோரையும் மறந்தேன்

நாடி வந்த தோழிகளை
ஏனோ தவிர்த்தேன்
அடுத்தவருடன் அளவளாவுவதை
நிறுத்தினேன்  
   
காரணமேயன்றி 
கவிதைகள் எழுதினேன்
பெண்களுடன் நீ பேசும்போது 
கோபத்தை அள்ளி வீசினேன்

அழகிய உன் சிரிப்பினை 
அமைதியாய் ரசித்தேன்
விழி மூடி தூங்கும் போதும் 
கனவிலும் உன்னையே கண்டேன்

எனை நீ பிரிந்த போது   
மனம் துவண்டு போனேன்
பாசம் என்றால் என்னவென்று
உன்னாலே அறிந்து கொண்டேன்

பாசத்தினால் சுயநலக்காரி
என்ற பெயரெடுத்தேன்
உன் கொள்கையிலே பிடிவாதக்காரி
என்ற பட்டம் பெற்றேன் 

மனங்களை படிக்க முயன்று
வாழ்வைத் தொலைத்தேன்
கடந்து போன துயரங்களையும்
மறந்து போனேன்    

இவையெல்லாம் உன்
உன் பாசத்தில் கட்டுண்டதால்
என்னுள் மலர்ந்த 
மாற்றங்கள்....



அனைத்து பதிவுலக சகோதர சகோதரிகளுக்கும் என் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Photobucket

Monday 19 December 2011

நான் பார்த்த காதலும்,நானறிந்த காதலும்.



காதல் அது எப்பொழுது வருகிறது? எங்கிருந்து வருகிறது? ஏன் வருகிறது? என்பது யாருக்குமே தெரிவதில்லை.எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத காலத்தில் எதிர்பாராத முறையில் திடீரென வருகிறது.சிலருக்கு கை கூடும்.சிலருக்கு கை கூடுவதில்லை.ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்.அது வந்தபின் பெண்களைச் சுயநிலை இழக்கச் செய்து விடுகிறது.

சாஜகான்-மும்தாஜ், அம்பிகாபதி-அமராவதி, லைலா-மஜ்னு, தேவதாஸ்-பார்வதி போன்ற காதல்களைப் போல சரித்திரத்தில் நின்று உலக மக்களின் நெஞ்சங்களிலும் வாழ்கின்ற காதல்கள், இன்னும் பிரபலப்படுத்தப்படாத தெய்வீகக் காதல்கள் எத்தனையோ......

நீர்க்குமிழிகள் போல சிதறிப் போகும் கல்லூரிக் காதல்களும்,காதலில் மட்டுமின்றி வாழ்க்கையிலும் ஜெயித்து பெருமை கண்ட காதல்களும் உண்டு.

ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர் மேல் ஒருவர் அன்பு கொள்வதுதான் காதல்.இந்த காதல் அழகைப் பார்த்து வருகிறதா? அல்லது ,அகத்தை உணர்ந்து  மலர்கிறதா?அழியும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காதலுக்கு ஆயுளும் குறைவுதான்.உள்ளத்தை நேசித்து மலர்ந்த காதலோ என்றும் அழியாமல் வரலாற்றில் சேரும்.

இன்றைய நவீன காலத்தில் கையடக்க தொலைபேசிக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவுக்கு காதலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

ஒரு பொம்மை உடைந்ததும் குழந்தை மற்றொரு பொம்மையை வைத்து விளையாடுகிறது.அதனால் குழந்தைக்கு முதல் பொம்மையிடம் இருந்த அன்பு பொய்யாக இருப்பதில்லை.ஆனால் அதே அன்பை அது இரண்டாவது பொம்மையிடமும் செலுத்த முடிகிறது.இளமையில் மனிதன் காதல் செய்வதும் இதுபோலத்தான்.

மனிதாபிமானம் கூடிய, விட்டுக் கொடுத்து இன்பம் காண்கின்ற, மன்னித்து மகிழ்கின்ற இரு மனங்களின் சந்திப்பில் மலருகின்ற உன்னதமான ஒரு ஆண் பெண் உறவுதான் காதல் என்பதாகும்.

வசந்தத்தில் குயில் பாடுவது ஏன்? மரங்கள் பூப்பது ஏன்? கோடையில் அடியோடு காணப்படாத மின்னல் மழை காலத்தில் இயல்பாக தோன்றுவது ஏன்? மொட்டு மலர்வது ஏன்? நதி கடலையே நோக்கி ஓடுவது ஏன்? பூமி சூரியனையே சுற்றி சுற்றி வருவது ஏன்? எல்லாமே ஏதோ ஓர் வகையில் காதல்தான். 

உலகத்தில் என்றும் அழியாத இரண்டு உண்மைகள் இருக்கின்றன.அவைதான் காதலும் சாதலும்.காதல் சாவைக் கூட வெல்வதனால்தான் ஓயாமல் தீயைக் கக்க வைக்கும் இந்த உலகில் மனித  வாழ்ந்தும் போராடியும் எதிர்கால நம்பிக்கையோடு வாழ்வில் முன்னேறுகின்றான்.
தாமரை மலரிடத்திலே ஒரு வண்டு வருகிறது.மலருக்கும் அது பிரியமாகவே இருக்கிறது.அது தன் உள்ளத்தில் வண்டிற்கு இடம் கொடுக்கிறது.ஆனால் தன் மகரந்த ரசத்தை மட்டும் தொடக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்கிறது.இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது தாமரைக்கு தன்னிடத்தில் இரக்கம் உண்டாகுமென்றும் அது தன் மகரந்தத்தை பருகக் கொடுக்கும் என்று வண்டு நினைக்கிறது.ஆனால் தாமரை தன் பிடிவாதத்தை விடவேயில்லை.இறுதியில் வண்டு அலுத்துப் போய் அதைவிட்டு பறந்து விடுகிறது.தாமரை மனதிற்குள் சொல்லிக் கொண்டது, "ஆண் சாதி எப்பவுமே இப்படித்தான் மோசம் செய்யும்."






Photobucket

Wednesday 7 December 2011

உயிரில் பூத்த என் ஒற்றைக் காதல்.

அன்று... 
அவனை முதன்முறையாய் கண்ட நாள் 
இருளும் ஒளியும் ஒன்று கூடிடும் நேரம் 
என் தோழிகள் சூழ்ந்த நிலையில் நானும் அவனும் 




முதல் தடவை சந்தித்தவேளையிலும் 
பலநாள் பழகிய ஓர் உணர்வுடன் 
தோழமையுடன் கை குலுக்கிக் கொண்டோம் 
பாதி வார்த்தைகளாலும் மீதி பார்வைகளாலும்
உணர்வுப் பரிமாற்றம் நடந்தது


அவன் பார்வையில் இருந்த நேசமும் 
அவன் அருகாமையில் என்னுள் மலர்ந்த  
பெண்மையின் மென்மையும் 
ஒரு கணம் சிலிர்க்க வைத்தது 



என்னவனைக் கண்டுவிட்ட மகிழ்ச்சியில்
இதயமோ துடித்தது
அவனைப் பிரியப் போவதை எண்ணி 
மனமோ தவித்தது



பேச வார்த்தைகளின்றி
அவனையே ரசித்தபடியே நின்றிருந்தேன்          
அவன் வார்த்தைகள் எதுவும் 
என் செவிகளில் விழவேயில்லை
அவன் குரல் மட்டும் 
கணீரென ஒழித்துக் கொண்டிருக்க 
மௌனமாய் நானிருந்தேன்

நேரமாவது கூட அறியவில்லை 
யாரோ என்னைத் தட்டும் ஓர் உணர்வில் 
திரும்பிப் பார்த்தேன் 
என் தோழிகள்
"எல்லோரும் உன்னைத் தேடுறாங்க
 வாடி நேரமாச்சு "

பிரிய மனமின்றி அவனும்
போக மனமின்றி நானும்
வேறு வழியின்றி விடை கூறினோம்

அவன் பெயரையும் என் பெயரையும் 
இணைத்து வைத்த இறைவன் 
இருவரையும் தூரமாக்கி வைத்ததும் ஏனோ? 



ஒருவேளை...
இருளும் ஒளியும் ஒன்று கூடிடும் நேரம் 
முதன்முறை நாம் சந்தித்ததாலோ...??? 
ஆம் வானில் முழுமதியும் கதிரவனும் 
ஒன்று சேர்வது எப்படி சாத்தியமாகும்? 



இருந்தும்... 
இறுதிவரை என் காதல் 
என் மனவறைக்குள் மட்டுமே 
அழிவதெல்லாம் அழியும் 
அவன் தந்த என் காதல்  
நினைவொன்றைத் தவிர...



Friday 2 December 2011

உயர்ந்த உள்ளமே உனக்கு ஓர் வாழ்த்து.02.12.2011


எப்படியெல்லாம் வாழலாம் என்று வாழும் இன்றைய மானிட சமூகத்தில் இப்படித்தான் வாழணும்னு தனக்கென்று ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு வாழும் மனிதர் எத்தனை பேர்? தான் வாழ்ந்தால் போதும் என்று நினைக்கும் சமூகத்தில் தன்னைச் சூழ்ந்த சமூகமும் துன்பமின்றி வாழனும் என்ற உயர்ந்த எண்ணம் எங்களில் எத்தனை பேருக்குத்தான் வரும்?எல்லா வசதி,வாய்ப்புகள்  இருந்தாலும் மற்றவர்களுக்கு உதவணும்கிற மனம் எல்லோர்க்கும் எளிதில் வருவதில்லை.தனது உறவுகளுக்கே உதவும் மனமில்லாத உறவுகள் மத்தியில்,தனது உறவுகள் மட்டுமல்லாது முகமறியா உறவுகளுக்கும் உதவணும்கிற கருணை உள்ளம் கொண்ட ஓர் பிறவி.

என்னால் நம்ப முடியவில்லை இப்படியும் ஓர் மனிதரா!
நம்பித்தான் ஆகணும்.இதுநாள் வரை  நான் கண்டதில்லை இப்படி ஓர் மனிதனை.இப்போதுதான் கண்டேன் இத்தகைய ஓர் அரிய உன்னத பிறவியை.அந்த மனிதர் வாழும் சுழலில் அவர் நிழலில் நானும் வாழ்கிறேன் என்று நினைக்கையில் எனக்கும் ஓர் பெருமிதம்.

இத்தகைய ஓர் உன்னத மனிதருக்கு இன்று மணிவிழாவாம்.நான் கண்ட உன்னத உறவை வாழ்த்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்ததையிட்டு பெரும் உவகையடைகிறேன்.நாயகன் இல்லாது கொண்டாடிய ஓர் மணிவிழா.ஆனாலும் அவரை நேசித்த உறவுகள் மறக்கவில்லை.அவரால் வரமுடியாத நிலையிலும் மணிவிழாக் காணும் நாயகனைப் பெருமைபடுத்தி கௌரவிக்க மறக்கவில்லை.எத்தனை பேர் அறிந்திருப்பீர்களோ தெரியவில்லை.

அவர்தான்,தியாகி அறக்கொடை நிதிய (Thiyahie Charitable Trust) ஸ்தாபகர் உயர்திரு.வாமதேவா தியாகேந்திரன் அவர்கள்.தளராத அறச் சிந்தனை விடாமுயற்சியாய்,உயர்ந்திட்ட செல்வம் பாலெனப் பொங்கிட காராம்பசுவானார் எங்கள் தியாகி.எல்லோர்க்கும் பேர்க்கு ஏற்றாற்போல் குணம் அமைவதில்லை.இவருக்கு மட்டும் பேருக்கேற்றாற்போல் குணமும் அமைந்ததுதான் அதிசயம்.வசதி வாய்ப்புக்கேற்ற மிடுக்கோ கர்வமோ இல்லாது ஒரு சாதாரண மனிதனாக தோன்றும் இவரா அவர் என வியக்க வைக்கும்.எல்லோரிடமும் பாசத்துடனும் மிகுந்த அக்கறையுடனும் பழகுவார்.

ஒருவருடம் இருவருடமல்ல 20 வருடங்களாக இந்த அறப்பணியை யார் உதவியுமின்றி தனியொரு மனிதனாய் மேற்கொண்டு வருகிறார்.சுவிஸ் நாட்டில் வாழ்ந்தாலும் கூட தனது தாய் நாட்டின் மீதுள்ள பற்றினால்,நலிவுற்ற சமூகத்தினது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் நோக்கிற்காக அயராது பாடுபட்டு வருகிறார்.தனது உழைப்பின் பெரும் பகுதியை ஏழை மக்களின் நலனுக்காகவே செலவு செய்து வருகிறார்.இவரது பணிகள் பற்றி சொல்லப்போனால் ஒரு பதிவு போதாது.பிறிதொரு பதிவில் அதை கூறலாம் என நினைக்கிறேன்.

தானில்லாத காலத்தில் கூட இந்த அறப்பணிகள் விடாது தொடர வேண்டுமென்பதற்காக TCT பல்பொருள் விற்பனை நிலையம்,TCT  விருந்தினர் விடுதி மற்றும் சொர்ணாம்பிகை திருமண மண்டபம் என்பனவற்றை அமைத்து அதன் மூலம் வரும் வருமானங்களையும் இந்த அறப்பணிக்கே செலவிட்டு வருகிறார். அதுமட்டுமல்லாது,TCT சிறுவர் இல்லாம் ஒன்று அமைத்து அதில் 20  இற்கும் மேற்பட்ட சிறுவர்களை பராமரித்து வருவதுடன் அவர்களுக்கு கல்வி வசதிகளையும் அளித்து வருகிறார்.

மெழுகாய் உருகி ஒளியாய் திகழும் இந்த தியாக தீப ஒளியால் ஒளிரும் முதியோர்,இளையோர்,மாணவர்,விதவைகள்,மாற்று வழுவூர்,ஆதரவற்றோர் என இன,மத,குல பேதமின்றியும்,நாடு கடந்து எட்டுத்திசையிலிருந்தும் வாழ்த்தொலிகள் ஒலிக்க இந்த நன்னாளில் மணிவிழா நாயகனை நானும் பால்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.
     
Photobucket

Saturday 26 November 2011

என் மனதை திருடிய பாடல்கள்.






பூங்காற்றில் வாசம் வரும்
இசை காற்றில் பாட்டு வரும்
எதிர் காற்றில் நாம் நிலைத்தாலே 
வாழ்ந்திடும் வாழ்வில் வெற்றி வரும்
அந்த வானம் நாம் தொடுவானம் 
நமக்கிங்கு ஓர்நாள் விடியாதா 
ஒரு தேடல் கண்ணில் உண்டு 
தினம் விடியல் விண்ணில் உண்டு
ஒரு நம்பிக்கைதான் வாழ்க்கை இன்று.
                                                                               ( பூங்காற்றில் )
இந்த உலகம் முதலில் ஏசும்
அது பின்னால் வாழ்த்திப் பேசும் 
நடை போடலாம் தடை தாண்டலாம்
விதை போட்டவன் மலர் பார்க்கலாம்
சிலர் கையில் ரேகை நம்பி
சிலர் கல்லை மணியை நம்பி
சுயமுள்ளவன் சுகம் காண்கிறான் 
பயமுள்ளவன் படை தோற்கிறான் 
இதயத்திலே இதயத்திலே இடிகள் எல்லாமே
சமயத்திலே சமயத்திலே படிகள் என்றாகும்
போராட்டமே புகழ் கூட்டுமே 
அலை போலவே நெஞ்சிலே என்றும் ஓய்வேது
தரை வாழ்விலே வாழ்விலே 
எதுவும் துணையில்லை
                                                                                ( பூங்காற்றில் )
என் பாட்டும் ஒரு நாள் வெல்லும்
செங்கோட்டை வரையில் செல்லும் 
போராடுவேன் போராடுவேன்
ஒரு நாளில் நான் புகழ் சூடுவேன்
ஒரு கல்லும் வைரம் ஆக 
அது மகுடம் ஏறிப் போக
இந்த பூமியின் அடி ஆழத்தில் 
மறைவாகுமே உயர்வாகுமே 
கனவுகளே இல்லையென்றால் வாழ்வே தூக்கம்தான்
முயற்சிகளால் வாழ்வினிலே முடியும் எல்லாம்தான்
முடியாததே கிடையாதடா 
எதிர் பார்க்கலாம் பார்க்கலாம் எங்கள் திறமைதான் 
வரவேற்கலாம் ஏற்கலாம் நாளை உலகம்தான்.
                                                                                  ( பூங்காற்றில் )


வாழ்கையில எத்தனையோ ஆயிரம் பாடல்களை நாம் கேட்டதுண்டு.
ஆனாலும் கூட நம் மனசில அழியாமல் நிற்பது ஓர் சில பாடல்கள்தான்.அந்த வகையில் என் மனசில் அழியாமல் நிற்கும் ஓர் பாடல்தான் இதுவும்.சோர்ந்து துவழும் நாட்களிலெல்லாம் இந்த பாடலைக் கேட்பதுண்டு.அப்போதெல்லாம் எனக்குள்ளும் ஓர் தன்னம்பிக்கை துளிர்விடும்.

வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஓர் இளைஞனின் ஓர் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் ஓர் பாடல்.போராட்டம் நிறைந்த வாழ்க்கையிலும் சோர்ந்துவிடாமல் மன உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் தன் இலக்கை அடைய வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு மனதில் ஓர் நம்பிக்கையைத் தரக் கூடிய ஓர் பாடல்.மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஓர் பாடல்.முன்னேறத் துடிக்கும் இளைஞர்களின் வாழ்க்கையினை மிக அழகாக வெளிப்படுத்திய கவிஞரின் திறமையை நிச்சயம் பாராட்டித்தான் ஆகணும்.

பாடல் பற்றிய மேலதிக தகவல் என்னால் வழங்க முடியவில்லை.அது பற்றி தெரிந்தவர்கள் இங்கே பகிரலாம்.

என்றும் அன்புடன்.
சித்தாரா மகேஷ்.

Sunday 20 November 2011

நிஜமாகிப்போன வாழ்க்கை.



முடிவேதுமின்றி 
தனிமையில் கழியும் என் நாட்கள்
உன்னிடம் பகிராமலே
மனதில் புதையும் சோக சுக ராகங்கள்
வெளியிட முடியாது
மறைக்கப்பட்ட ஆசை கனவுகள்


எப்போதோ மறுக்கப்பட்ட
 நம் பாச நேசங்கள் 
மறக்க முடியாத 
உன் நினைவு அலைகள்
உன்னையே ஞாபகப்படுத்தும்
நீ தந்த நினைவுச் சின்னங்கள்


உன்னாலே  தூரமாகிப்போன 
என் உறக்கம்
கனவுகளுக்காய் காத்திருக்கும்
இரவுகள் 
விட்டத்தையே பார்த்திருக்கும்
என் விழிகள் 

என்னடா வாழ்க்கை இது......?


Tuesday 1 November 2011

நீ..நான்..யாரோ..


எப்போதும் வார்த்தைகளால்
மட்டுமே உன்னுடன் பேசிய நெஞ்சம்
இப்போது கொஞ்சம் 
மௌனங்களிலும் நேசத்தை 
பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறது 

மனங்களைப் படித்தவர்களே 
நம் மனதை உணராதபோது 
மற்றவர்களை நாம் ஏன் 
தப்பாக நோக்கணும்

உன் நினைவுகளால்
தினந்தினம் நான் படும் அவஸ்தைக்கு
உன் பிரிவுதான் 
தீர்வாக எழுதிய நெஞ்சம் 
ஓர் நாள் நமக்காகவும் கலங்கும்
அன்றே நமக்கான நாள்

என்றோ ஓர் நாள்
சேமித்து வைத்த உன் நினைவுகள்தான்
இன்று என் உயிர்த்துடிப்பை 
வழிப்படுத்தும் நிலை 

நீயில்லாத என் பொழுதுகளை
எண்ணிப் பார்க்கிறேன்
இப்போது உனக்காகச் சிந்தக்கூட
விழிகளினுள் ஏதுமில்லை
வலிகளினூடும் உன் நினைவுகளில்
என் வாழ்வு தொடர்கிறது

உனக்காக மட்டும் உருகிய நெஞ்சம்
இப்போது எதற்கும் உருகவில்லையே
ஏனடா.....????



Sunday 23 October 2011

ஒருவரைக் கடுப்பேத்துவது எப்புடி......?


நீங்க எல்லாரும் தினந்தினம் எத்தனையோ பேரை கடுப்பேத்தியிருப்பீங்க இல்லா எத்தனையோ பேரால நீங்க கடுப்பாயிருப்பீங்க.அப்போ உங்க நிலைமையையும் அவங்க நிலைமையையும் ஒருக்கா நினைச்சு பாருங்க.உங்களில ஒரு சிலர் மற்றவங்கள எப்பிடி கடுப்பேத்தலாமெண்டு ரூம் போட்டு யோசிச்சிருப்பீங்க.ஒருத்தரை கடுப்பேத்துறதென்பது ஒன்றும் பெரிய கஷ்டமான வேலையில்ல.அதுக்காக நீங்க நேரமெல்லாம் செலவழிக்க தேவையில்ல.ரொம்ப சுலபம்.இதெல்லாம் எனக்கெப்பிடி தெரியும்னு நினைக்கிறீங்களா?எல்லாம் ஒரு அனுபவம்தான்.வேணுமென்றால் நீங்க கூட முயற்சி பண்ணி பார்க்கலாம்.

என்னோட அனுபவத்தில கொஞ்சம் சொல்றேன்.உங்களுக்கும் ஏதாச்சும் புது ஐடியா இருந்தா பகிர்ந்து கொள்ளுங்க . 

  • வீதியில கண்டால் தெரியாத மாதிரி போயிடுங்க.கேட்டால் நான் வேற யோசனையில போட்டன் கவனிக்கல எண்டு சொல்லிடுங்க.
  • வேறு ஒருத்தருக்கு நீங்க அனுப்பிய மெசேஜ்சினை அவருக்கு அனுப்பலாம்.கேட்டால் மாறி அனுப்பீற்றன் என்று சொல்லலாம்.
  • ஒருத்தர் call பண்ணினா நான் பிஸியா இருக்கேன் அப்புறம் பேசுறேன்னு சொல்லிற்று cut பண்ணிக்கலாம்.ஆனா கடைசி வரைக்கும் call பண்ணக்கூடாது.
  • மறுபடி மறுபடி call பண்ணினாங்கன்ன அவங்க நம்பர்களை call block பண்ணி விட்டுக்கலாம்.
  • அவங்க call மட்டும் தவிர்த்திட்டு நாம வேற call பேசிற்று இருந்தோம்னா call waiting cancel பண்ணிக்கலாம்.
  • மெசேஜ் அனுப்பினாங்கன்னா பதில் அனுப்பக் கூடாது.கேட்டா மெசேஜ் வந்ததை கவனிக்கல பிஸியா இருந்தேன்னு சொல்லிக்கலாம்.
  •  போனை off பண்ணி வச்சுக்கலாம்.அப்புறம் கேட்டால் current இல்லை charge இல்லைன்னு சொல்லிக்கலாம்.
  • மீண்டும் மீண்டும் மெசேஜ் அனுப்பீற்றிருந்தால் wait a minute என்று சொல்லிற்று கடுப்பாகிற வரைக்கும் அவங்கள wait பண்ண வைக்கலாம்.
  •  e-மெயில் அனுப்பினாங்கன்னா reply பண்ணாதீங்க.கேட்டால் இன்டர்நெட் வேலை செய்யலன்னு சொல்லிக்கலாம்.
  • Skype இல call பண்ண சொன்னாங்கன்னா headphone சரியில்ல headphone  மாத்தணும்னு சொல்லுங்க.
  • Facebook இல அவங்களை பற்றி status போட்டுக்கலாம்.
  • இது எல்லாத்தையும் விட சிறந்த ஐடியா.ஏன் இப்பிடி அவங்கள பற்றி ஒரு பதிவு போட்டே கடுப்பேத்தலாமே.

கடைசியில அவரோட நிலைமை இப்பிடித்தானே இருக்கும் ?ஹ ஹ ஹ ஹா.....
அப்போ பதிவு போட்டவங்க நிலைமை இதுதானே ?





Sunday 16 October 2011

தேடிப் பெற்ற சிதறல்கள்.


மனதில் ஆயிரம்
கனவுகள் தொடுத்த கேள்விகள்
பதிலேதும் புரியாத வாழ்க்கை 
இரண்டின் மத்தியிலும் 
நிலையில்லா உறவுகளைத் தேடி 
தினந்தோறும் தொடர்கிறது
என் கனவுப் பயணம்....
*********************************************************************************

Friday 2 September 2011

உயிருள்ள ஓர் ஜடத்தின் புலம்பல்.


ரொம்ப நாளைக்கப்புறம்  
அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்ளும்
அந்த இடத்திற்குச் சென்றேன் 

Monday 29 August 2011

வரமொன்று தருவாயா?


உறவுளை இணைத்து வைத்தவனே 

இன்று உறவுக்காய் ஏங்குகையில்
மௌனமாய் தவமிருக்கிறாயே தாயே 
எம் அழுகுரல்கள் உன் செவிகளில்
இன்னுமா விழவில்லை?
இல்லை புரிந்தும் புரியாமலிருக்க  
நீயுமென்ன கல்லா!

Monday 15 August 2011

பெண்மையைப் பற்றி கொஞ்சம்.....



  • காற்றுப் படப்படக் கற்பூரம் கரைந்து போவதைப்போல அதிக படிப்பிலும் வெளிப்பழக்கங்களிலும் பெண்மையின் மென்மை கரைந்து பெண்ணின் உடலோடும் ஆணின் மனதோடும் வாழ்கின்ற நிலை பெண்களுக்கு வந்துவிடுகிறது.
  • ஒரு பெண் புகழ் சம்பாதிக்கலாம்,அளவற்ற அறிவைச் சம்பாதிக்கலாம். ஆனால், சாதாரண உலகத்தில்,சாதாரண முறையில் சாதாரண மனிதர்கள் வாழும் வாழ்க்கையை புரிந்துகொள்ளாதவரை சாதாரண உலகில் அவளைப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
  • பெண் இரசம் பூசப்பட்ட கண்ணாடியைப் போன்றவள்.தன்னில் தோன்றும் எந்த உணர்ச்சிச் சாயல்களையும் அவளால் மறைக்கவோ மறுக்கவோ முடிவதில்லை.
  • வயது ஆக ஆக பெண்களிடத்திலே பெண்மையின் மயக்கும் அழகு மறைந்து தாய்மையின் தெய்வீக அழகு தோன்றுகிறது.
  • எந்த இடத்தில் எந்த சமயத்தில் எந்த கேள்வியை கேட்கலாம்,எதைக் கேட்கக் கூடாது என்ற பாகுபாட்டை அடியோடு அறியாத ஒரு இனம் உலகத்தில் இருக்குதென்றால் அது பெண் இனம்தான்.எந்த சமயத்தில்,எந்தக் கேள்வியைக் கேட்டால் ஆண்மனம் திண்டாடுமோ அந்தக் கேள்வியைத் தவறாமல் கேட்கும் இயல்பு பெண்களுக்கு உண்டு.
  • ஆண்கள் நிகழ்காலத்திற்காக மட்டும் வாழ்கிறார்கள்.ஆனால்,பெண்கள் தங்களது ஒரு தலைமுறையைச் சேர்ந்த வாழ்வு வாழ்கிறார்கள்.அதனால் அவர்களது வாழ்வு பல தலைமுறைக்கு நற்பண்பு நல்கிக் கொண்டே தொடர வேண்டிய வாழ்வாக உள்ளது.
  • உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானமாயிருப்பது ஆண்தன்மை. உணர்ச்சிகளுக்கு இடமளிப்பது பெண்தன்மை.
  • வார்த்தையின் உதவியில்லாமல் ஜாடை, கைநெளிவு, உடல்வளைவு, கன்னக்குழிவு,கண்பார்வை இவற்றின் மூலமாக சுலபமாக தன் உள்ளத்து உணர்ச்சிகளை வெளியிட்டுவிடுவார்கள் பெண்கள்.
  • ஒருவனை மனத்தால் நினைத்த பிறகு இன்னொருவனை திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்ற நிலை ஏற்பட்டுவிட்டால் இந்த உலகில் பல பெண்கள் கன்னிகளாகவே காலம் கழிக்க நேரிடலாம்.வயது வந்த பின் படிக்கச் செல்லும் பெண்கள் வாழ்க்கையிலும்,வேலைக்கு செல்லும் பெண்கள் வாழ்க்கையிலும் சிறு சிறு சலனங்கள் ஏற்படுவதுண்டு.தன்னுடன் படிக்கும் மாணவனிடம் மனதை பறிகொடுக்கும் மாணவியும்,சக உழியருடன் சிரித்துப் பேசி சிந்தையை சிதறவிடும் பெண்களும் உண்டு.அவர்களில் பெரும்பாலாரது ஆசைகள் பலிப்பதில்லை.
  • மலருக்கு கொடுத்திருக்கும் அழகை யாருக்கு இறைவனால் வழங்கப்பட்டிருக்கிறது?பெண்ணுக்கே.அந்த மலர் இறைவன் காலடியை சந்திக்கும் பொது உயர்வு பெறுகிறது.அதே மலரின் இதழை உதிர்த்து அதன் அழகை கலைத்து இறைவனுக்கு பூஜிக்கும்போது போது அது புனிதமடைகிறது.பெண்ணும் அந்த மலரைப் போன்றவள்.அவள் அழகு குடும்பம் என்ற கோயிலுக்குள் சேர்க்கப்படும்போது உயர்வு பெறும்.கணவன் என்றும்,குழந்தை என்றும்,தியாகம் என்றும்,கடமை என்றும் அவள் அழகை இதழ் இதழாக பிரித்து அர்ச்சிக்கும்போது தான் அவள் புனிதமடைகிறாள்.

நிஜக்கலப்பில்லாமல் முழுப் பொய்யாக ஒன்றுமே வெளிவராதுங்க. அதேபோல முழு நிஜமாக பொய் கலப்பில்லாம எதுவுமே வராதுங்க.ஏதும் புரிஞ்சுதாங்க?ஹ ஹ ஹ ஹா....


Saturday 6 August 2011

வைரப் புதையலின் பூமி.




வைரமென்றால் வாய் பிளக்காதவர் யாரும் உண்டோ என்றால் இல்லை.வைரப் புதையலின் பூமி பற்றி உங்களுக்கு தெரியுமா?
         தென்னாபிரிக்காவில் வைரங்களை அள்ளித்தந்த புதையல் பூமி கிம்பர்லி.மத்திய தென் ஆபிரிக்கப் பகுதியில் "ஆரஞ்சு " நதியை அண்மித்து அமைந்துள்ளது இந்த சுரங்கத் தொழில் நகரம்.தற்போது ஏறத்தாழ 21 இலட்சம் பேர் இந்நகரத்தில் வசிக்கிறார்கள்.
        ஹோப்டவுனுக்கு பக்கத்திலுள்ள உள்ளூர்க்காரரின் பண்ணை ஒன்றை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்தவர் எராமாஸ் ஜேகப்ஸ்.இவர் ஆரஞ்சு நதிக்கரையிலே ஒரு வெள்ளைக் கல்லைக் கண்டெடுத்தார்.அதைச் சுத்தப்படுத்தியபோதுதான் தெரிந்தது அது 4.25 கிராம் எடையுள்ள 21.25 கரட் விலையுயர்ந்த வைரம் என்று.ஒரு சில ஆண்டுகளின்பின் 1971 ஆம் ஆண்டு மீண்டும் அதே பகுதியில் 16.7  கிராம் எடையுள்ள 83.50 கரட் வைரம் ஒன்று கிடைத்தது.
           இப் பகுதியில் வைரம் கிடைப்பது பற்றி தகவல் பரவவே நாடெங்கும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இந்த பூமியை நோக்கி படையெடுக்கத் தொடங்கினர்.அதனால் இப்பகுதியில் "நியூ ரஷ்" என்ற நகரம் உருவானது.அப்போது தென்னாபிரிக்கா பிரிட்டிஷ் காலனிகளுக்கு செயலாளராக இருந்த ஜான் வோட்ஹவுஸ் என்பவர் "நியூ ரஷ்" என்பதை "கிம்பர்லி" என்று பெயர் மாற்றினார். 
           கிம்பர்லியில் முதல் முறையாக செயற்படத் தொடங்கிய நிறுவனம் செசில் ரோட்ஸின் டீ பியர்ஸ் ஆகும்.கிம்பர்லியில் 5 மிகப் பெரிய சுரங்கங்கள் உள்ளன.இவற்றில் பெரிய சுரங்கமானது பெரிய துவாரம் 240 மீற்றர் ஆழம் கொண்டது.இது 1914 ஆம் ஆண்டு மூடப்பட்டது.டுடாயிட்ஸ்பான்,வேசல்டன்,பல்ட்பான்டீன் ஆகிய 3 வைரச் சுரங்கங்கள் 2005 ஆம் ஆண்டு மூடப்பட்டன.தற்போது ஒரு சுரங்கத்தில் மட்டும்தான் வைரம் அகழப்படுகிறது.



வைரங்களின் மீது ஆசை கொண்டவர்களின் நிஜமான பூமி கிம்பர்லி.

Saturday 2 July 2011

சிந்திக்க வேண்டிய சில விடயங்கள்.I



  • மாற்ற முடியாத,திருத்தமுடியாத காரியங்களைப் பற்றி அநாவசியமாகக் கவலைப்படுவது,தனது நம்பிக்கை,கொள்கைகளைப் பிறர்மேல் வற்புறுத்தி சுமத்துவது,அற்ப விடயங்களை உதறித் தள்ள மறுப்பது,மனம் வளர்ச்சியடைய சிந்தித்து செயற்பட இடங்கொடாதிருப்பது இவையனைத்துமே மனிதனின் குறைபாடுகள்.
  • மனிதர்கள் தங்கள் செயலை நியாயமானது என்று காட்டவே சிந்தனையை பயன்படுத்துகிறார்கள்.சிந்தனையை மறைக்கவே சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.
  • பிறர் எதைச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறோமோ அதை நீயே செய்து காட்டு.
  • பிடித்தமானவர் என்ன தவறு செய்தாலும் அது விருப்பமாகத்தான் இருக்கும்.வெறுக்கத்தக்க பல குறைகள் நிறைந்திருந்தாலும் தன் உடலில் யாருக்குத்தான் விருப்பமில்லை.
  • மனதில் பலவீனம் புகுந்துவிட்டால் அங்கே அமைதி ஏற்படும்வரை கோபம்தான் நிறைந்திருக்கும்.
  • துன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு நண்பன் இருந்தால் துன்பம் பாதியாகக் குறைந்துவிடும்.இன்பத்தை பகிர்ந்துகொள்ள ஒரு துணை இருந்தால் இன்பம் பலமடங்கு அதிகமாகிவிடுகிறது.
  • நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பமே தக்க சந்தர்ப்பம்.அதனால் நமக்கு கிடைக்கும் முதற் சந்தர்ப்பத்தை எப்பொழுதும் நழுவவிடக் கூடாது.
  • புத்தகங்களைப் படித்து அறிந்துகொள்ளும் அறிவு மட்டும் இந்த நூற்றாண்டின் வாழ்க்கைக்கு போதாது.மனிதர்களைப் படித்து அறிந்துகொள்ளும் ஞானம்தான் இந்தக்காலச் சமூகத்தில் வெற்றி பெறுவதற்கு சரியான கருவி.ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் பல குழப்பங்கள் நிறைந்த ஒவ்வொரு புத்தகமாகத்தான் இருக்கிறான்.அவனைப் படித்து புரிந்து கொள்வது அருமையாக இருக்கும்.
  • சந்தர்ப்பங்களும் ஆசைகளும் அருகருகே நெருங்கும் போது எத்தனையோ நினைவுகள் தானாகவே எளிதாக நிறைவேறிவிடுகின்றன.
  • நல்லவரைப் பார்க்கும்போது பின்பற்ற நினையுங்கள்.தீயவரைப் பார்த்தால் உங்கள் இதயத்தைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
  • மனிதன் தன்னை மட்டுமல்ல இந்த உலகத்தையே மறந்து பல கொடுமையான காரியங்களைச் செய்வது ஒரு நிமிடம் உணர்ச்சி வசப்படுவதால்தான்.அதே மனிதனுக்கு பெருமையையும் புகழையும் தேடிக் கொடுப்பது அவன் நிதானமாக கடைப்பிடிக்கும் அந்த ஒரு நிமிடம்தான்.
  • வெற்றி ஒரு வானவில்.எட்டத்தில் இருப்பதால்தான் அதற்கு கவர்ச்சியும் அழகும்.

Saturday 25 June 2011

தொடரும் காத்திருப்புகள்.

                             
அருகே இருக்கையில்  வெ(ம)றுத்த
அகன்று செல்கையில் விரும்பியது ஏன்
கிட்ட இருக்க அன்பாய் தெரிந்தது
கடந்து செல்ல காதலாகியது ஏன்
பக்கம் இருக்கத் துடித்த என் இதயம் 
நீ பிரிந்து சென்றதும் தூங்கியது ஏன்

கடந்துபோன பிரிவும் கூட
என் சிந்தனைகளை மீட்டிச்செல்கிறது 
உன் சிரித்த முகம்கூட
நினைவில் வந்து போகிறது
கதை சொல்லிப்போன நினைவு
என்னைத் துடிக்க வைக்கிறது

கண்ணிமைக்காதிருந்த வினாடிகள்
உனக்காக என்னை அழ வைக்கின்றன      
மனம் தடுமாறி பின் 
சிந்திக்க வைக்கின்றன

விரும்பிய உன்னை விலக்கிய நெஞ்சம்
விரதம் இருந்து தவிப்பதும் ஏன்
நிஜத்தில் இல்லாதுபோன உணர்வு
நினைப்பிலே என்னைக் கொல்வதும் ஏன்

அன்று உன் காதலை நீ சொன்னபோது
ஏனோ ஏற்கவில்லை 
இன்று இல்லாத உனக்காக
ஏங்குகிறது என் இதயம்

உன் நினைவுகளை சுமந்தபடி 
வாழ்வதைத்தவிர
எதுவுமே முடிவதில்லை இப்போதெல்லாம்
உன் காதலுக்காக

காதலுடன் நீ 
என் அருகில் வரும்போதெல்லாம்
விரட்டியது மனசு 
எப்போ செல்வாய் என நினைத்த நான்
என்று வருவாயென இன்று
ஏங்குவதும் ஏன் 

வருவாயா மீண்டும் எனக்காக
ஒருமுறையாவது
காத்திருக்கிறேன் உனக்காக.



 

Wednesday 1 June 2011

ராக்கெட் விடுறவங்களுக்கு கொடுக்கிற நோஸ்கட் என்பது இதுதானோ ?

             
               காதலை உலகம் எப்பிடியெல்லாம் கொண்டாடுகிறது.பலர் தம் காதலை வெளிப்படுத்த தெரியாமல் பெரும் அவஸ்தைப்படுகிறார்கள்.சிலர் காதலை வெளிப்படுத்தி காதலில் வென்றும் இருக்கிறார்கள்.சிலர் தோற்றும் இருக்கிறார்கள்.இங்கும் ஒருத்தன் எவ்வாறு தன் காதலை எவ்வாறு வெளிப்படுத்துகிறான் என்றுதான் பாருங்கள்.இது ஒரு லெட்டர் வடிவிலான காதல் காமடி.கொஞ்சம் படிச்சுத்தான் பாருங்களேன்.

ஒரு மாணவன் லவ் லெட்டர் எழுதுகிறான்......

அன்பே சுசி ! 
கீழே நான் கொடுத்திருக்கிற எல்லா கேள்விகளுக்கும் உனக்கு சரியென்று தோன்றும் பதிலை தெரிவு செய்.

1. நீ நம்ம கிளாசுக்கு உள்ளே வரும் போதெல்லாம் நிச்சயம் உன் பார்வை என்மேல விழுகிறது.அதுக்கு  காரணம் :
. காதல்
. என்னால உன்னைப் பார்க்காம இருக்க முடியல
. உண்மையாவா?அப்படியெல்லாம் ஒன்றும் இல்லையே


2. நீ ஒருநாள் கிளாஸ்ல பாடிக் கொண்டிருந்தப்போ அந்த நேரம் பார்த்து நான் உள்ளே வந்தேன்.நீ உடனே பாடுறதை நிறுத்திவிட்டாய் .அதுக்கு காரணம்:
. உன் முன்னால் பாடுறதுக்கு எனக்கு வெட்கமா இருந்திச்சு
. நான் பாடிக் கொண்டிருந்தது உனக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு எனக்கு பயமா இருந்திச்சு
. நீ திடீரென்று உள்ளே வந்தது எனக்கு என்னமோ மாதிரி ஆயிடுச்சு


3. உன்னோட சின்ன வயசு போட்டோவை நீ எல்லோருக்கும் காட்டிக் கொண்டிருந்தாய்.ஆனால் நான் கேட்டதும் நீ அதை மறைச்சிட்டாய்.அதுக்கு காரணம்:
. எனக்கு வெட்கமா இருந்திச்சு
. உன்கிட்ட காட்டுறதுக்கு எனக்கு ஏதோ ஒரு சங்கடம்.
. என்னவோ தெரியல.


4. நாங்க சுற்றுலா போனப்போ, ஒரு மேடு ஏறும்போது நானும் என்கூட இருந்த நண்பனும் உனக்கு கை கொடுக்க வந்தோம்.நீ அவனோட கையை பிடிச்சு மேல ஏறி வந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உன்னோட ஏமாற்றத்தை பார்க்க ஆசைப்பட்டேன்.
உன் கையை பிடிச்சா, உடனே விட்டுட்டு போக எனக்கு மனசு வராது
இ. முதன் முதலில் உன் கையை அப்பிடியா பிடிக்கிறது

5. நீ நேற்று பஸ் ஸ்டாண்டில காத்துக் கொண்டிருந்தாய்.ஆனா பஸ்ல ஏறல.அதுக்கு காரணம்:
அ. நீ ஏறும்போது ஏறலாம்னுதான்
ஆ. நீ என்னையே பார்த்துக் கொண்டிருப்பதை குழப்ப வேணாம் என்று நினைச்சேன்.              
இ. உன்னை நினைச்சிட்டு இருந்ததில பஸ் வந்தததை கவனிக்கல 

6. எனக்கு ரோஜாப்பூ  பிடிக்கும்னு ஒருநாள் சொன்னேன்.அடுத்தநாள் நீ தலையில ரோஜாப்பூ வச்சிட்டு வந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உனக்குத்தான் ரோஜாப்பூ பிடிக்குமே அதுக்காக
ஆ. உனக்கு பிடிச்சதெல்லாம் எனக்கு பிடிக்க வேணாமா
இ. நீ காரணம் கேட்டால் உனக்கு மட்டும்தான் ரோஜா பிடிக்குமான்னு சண்டை பிடிக்கலாம்னு நினைச்சேன்

7. என் பிறந்தநாள் அன்று காலையில் நான் கோயிலுக்கு வந்தேன்.நீயும் அன்று கோயிலுக்கு காலையில் கோயிலுக்கு வந்திருந்தாய்.அதுக்கு காரணம்:
அ. உன் பிறந்த நாளன்று உன் கூட சாமி கும்பிடலாம்னு
ஆ. உன் பிறந்தநாளன்று எல்லோருக்கும் முதல் நான் உன்னைப்
பார்க்கணும்னு
இ. உனக்கு கோயிலில் வச்சு வாழ்த்து சொல்லணும்னு
ஆசைப்பட்டேன்.

இந்தக் கேள்விகளுக்கு நீ எந்தப் பதிலை தெரிவு செய்திருந்தாலும் தப்பில்லை.எல்லா கேள்விகளுக்கும் ஒரு புள்ளி இருக்குது.
அ- இற்கு 10 புள்ளி.
ஆ- இற்கு 5 புள்ளி.
இ- இற்கு 3 புள்ளி.
இந்த கேள்விகளுக்கு நீ வாங்கியிருக்கிற மொத்தப் புள்ளிகள்....


-50 புள்ளிகளுக்கு மேல இருந்தால், "நீ என்னை காதலிக்கிறாய் ஏன் அதை என்கிட்ட சொல்ல மாட்டேங்கிறாய்."
-30 இற்கும் 40 இற்குமிடையில் இருந்தால், "உனக்கு என்மேல காதல் வர ஆரம்பிச்சிருக்கு"
-30 இற்கும் கீழே இருந்தால்,"உனக்கு என்னைப் பிடிச்சிருக்கு.ஆனால், காதலிக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறாய்."
உன்னோட பரீட்சை முடிவை எதிர்பார்த்துக் காத்திருக்கும்.
                                                                                                                  -உன் அன்புக் காதலன்.

இந்த லெட்டரை பார்த்திட்டு எரிச்சலான அந்தப் பொண்ணு , முள்ளை முள்ளால்தான் எடுக்கணும் என்று அவன் கொடுத்த மாதிரியே ஒரு பதில் லெட்டர் எழுதிக் கொடுத்தாள். 




இது அவளோட லெட்டர்,

1. வகுப்பிலே முதல் வரிசையில யாராவது உட்கார்ந்திருந்தா உள்ளே வாறவங்க அவங்களை பார்க்கிறது சகஜம்.
1. ஆம்.                                                              2. இல்லை.

2. பாட்டுப் பாடும்போது, திடீரென்று பாட்டு வரி மறந்து போனால் பாடுறவங்க பாடுறதை பாதியிலே நிறுத்துவாங்கதானே.
1. ஆம்.                                                              2. இல்லை.

3. நான் என்னோட சின்ன வயசுப் போட்டோவை என் நண்பிகள் கிட்ட காட்டிக் கொண்டிருந்தப்போ நீ நடுவில வந்து மூக்கை நுழைச்சிட்டாய்.
1. ஆம்.                                                              2. இல்லை.

4. சுற்றுலாவில உன் கையைப் பிடிச்சு மேடு ஏறுவதை நான் தவிர்த்தேன்.அது ஏனென்று உனக்கு இன்னும் புரியவில்லை.
1. ஆம்.                                                              2. இல்லை.

5. நான் என்னோட தோழிக்காக பஸ் ஸ்டாண்டில காத்துக் கொண்டிருக்கக் கூடாதா?
1. ஆம்.                                                              2. இல்லை.

6. உனக்கு ரோஜா மட்டுமல்ல தாமரை,காலீப்ளவர் கூட பிடிக்கும்னு சொன்னாயே.அது உண்மைதானே?
1. ஆம்.                                                              2. இல்லை.

7. ஓ அன்று உன் பிறந்தநாளா? அதுதான் கோயில் பக்கம் பார்த்தேனா? நான் தினமும் காலையில் கோயிலுக்கு வருவேன்.அது உனக்கு தெரியுமா?
1. ஆம்.                                                              2. இல்லை.

மேலே சொன்ன கேள்விகளில்,


-ஒரு கேள்விக்காவது நீ "ஆம்" என்று சொல்லியிருந்தால் நான் உன்னைக் காதலிக்கவில்லை.
-ஒரு கேள்விக்காவது நீ "இல்லை" என்று சொல்லியிருந்தால் உனக்கு காதலென்றால் என்னென்றே தெரியல.                                                                         
                                                                                                                                         -சுசி.

இது எப்புடீ.............?
         






  

 
   

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More