Tuesday 1 November 2011

நீ..நான்..யாரோ..


எப்போதும் வார்த்தைகளால்
மட்டுமே உன்னுடன் பேசிய நெஞ்சம்
இப்போது கொஞ்சம் 
மௌனங்களிலும் நேசத்தை 
பகிர்ந்து கொள்ளத் துடிக்கிறது 

மனங்களைப் படித்தவர்களே 
நம் மனதை உணராதபோது 
மற்றவர்களை நாம் ஏன் 
தப்பாக நோக்கணும்

உன் நினைவுகளால்
தினந்தினம் நான் படும் அவஸ்தைக்கு
உன் பிரிவுதான் 
தீர்வாக எழுதிய நெஞ்சம் 
ஓர் நாள் நமக்காகவும் கலங்கும்
அன்றே நமக்கான நாள்

என்றோ ஓர் நாள்
சேமித்து வைத்த உன் நினைவுகள்தான்
இன்று என் உயிர்த்துடிப்பை 
வழிப்படுத்தும் நிலை 

நீயில்லாத என் பொழுதுகளை
எண்ணிப் பார்க்கிறேன்
இப்போது உனக்காகச் சிந்தக்கூட
விழிகளினுள் ஏதுமில்லை
வலிகளினூடும் உன் நினைவுகளில்
என் வாழ்வு தொடர்கிறது

உனக்காக மட்டும் உருகிய நெஞ்சம்
இப்போது எதற்கும் உருகவில்லையே
ஏனடா.....????



7 comments:

//
உன் நினைவுகளால்
தினந்தினம் நான் படும் அவஸ்தைக்கு
உன் பிரிவுதான்
தீர்வாக எழுதிய நெஞ்சம்
ஓர் நாள் நமக்காகவும் கலங்கும்
அன்றே நமக்கான நாள்
//

அருமையான வரிகள்

உனக்காக மட்டும் உருகிய நெஞ்சம்
இப்போது எதற்கும் உருகவில்லையே
ஏனடா.....????//

வலி நிறைந்த வரிகள், சூப்பர்ப்....!!!!

ஒரு கனத்த இதயத்திலிருந்து வரும் சொல்லாடல் வார்த்தையை தேடிப்பிடித்து வசமாக்கி இருக்கிறீர்கள் உங்களின் வார்த்தைக்குள் சிறைப்பட்ட அந்த வண்ண ஓவியம் உண்மையில் பாராட்டுகளுக்கு உரியன வெல்லட்டும் காதல் மழை .....

நீயில்லாத என் பொழுதுகளை
எண்ணிப் பார்க்கிறேன்
இப்போது உனக்காகச் சிந்தக்கூட
விழிகளினுள் ஏதுமில்லை
வலிகளினூடும் உன் நினைவுகளில்
என் வாழ்வு தொடர்கிறது

அருமை.... www.rishvan.com

நல்லாயிருக்கு... பாராட்டுக்கள்.

என்றோ ஓர் நாள்
சேமித்து வைத்த உன் நினைவுகள்தான்
இன்று என் உயிர்த்துடிப்பை
வழிப்படுத்தும் நிலை

//

சான்சே இல்ல... கவிதை வாசித்து முடிக்கும் போது என்னையும் மீறி கண்ணில் நீர் கசிய ஆரம்பித்தது...

Post a Comment

Blogroll

Related Posts Plugin for WordPress, Blogger...

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More